Tuesday 21 May 2013

திருமணமான ஆண்கள் கவனிக்கவும்...




மாமா எப்படி இருக்கிங்க…?
“ உங்க அக்காவை கட்டிண்ட பிறகு என் தலையை பார்த்தாவே தெரியலையா எப்படி இருக்கேன்னு..”
தலையை பார்த்தேன்…
ஆடு வந்து ஒரு ஏரியா மட்டும் மேய்ந்து விட்டது போல காலியாக இருந்தது.
“ அட மாமா நீங்க ரியல் எஸ்டேட் பிஸினஸ் பண்றவரா இருக்கலாம் அதுக்காவ உங்க மண்டையையுமா இப்படி பிளாட் போடறது..?”
“ ஏய் உதை படுவே.. கல்யாணத்துக்கு முன்னாடி தலைய வாரினா சீப்பே உடைஞ்சிடும்… எல்லாம் பெண்டாட்டின்னு ஒரு ராட்சஸி வந்த பிறகுதான் இப்படி ஆயிடுது…”
“ சும்மா அக்காவை சொல்லிட்டிருந்தீங்க..மிச்சம் இருக்கிற ஏரியாவும் காலியாயிடும்… ஆமா..”
“ அங்க பாரு உங்க அண்ணனை … எங்கண்ணன்  படிய தலை சீவிகிட்டு  (நடிகர்) முரளி மாதிரி இருப்பாருன்னியே…. அவருக்கும் முன்ன கொஞ்சம், பின்ன கொஞ்சம் காணலை …. அவரையே போய் கேளு…”
“என்ணன்னே… நிசமாவா….?”
“ உங்க அண்ணி சமைய கட்டிலதானிருக்கா? பயந்து கொண்டே, கிசு கிசுப்பாய்..” ஆமாடி… பேய் மாதிரி ஒருத்தி உள்ள இருக்காளே அவளால்தான் இப்படி ஆச்சி….”
“ மச்சான் இங்க மட்டும் என்ன  வாழுதாம்.. போற போக்கை பார்த்தா சகலையும் நம்ம கூட கூட்டணியாயிடுவார் போலிருக்கே…”
கண்ணாடியில் தலை சீவிக்கொண்டிருந்த அவரை பார்த்தேன்.. ஆடு வந்து மேய ஆரம்பித்தவுடன் விரட்டி விட்டது போலிருந்தது.
“சகலை நீங்களாச்சும் உண்மை சொல்லுங்க…”
“ அது வந்து…  வந்து…
"ஏடாமா எதாது சொன்னே... ீட்டுக்கு ந்தும் இருக்கு கச்சேரி..  பார்வையிலே சொன்தும்..
" அப்டில்லாம் ஒண்ணுமில்லைங்க... ஷாம்போலாதான் இப்டி கொட்டுது.. "
" ங் அப்டி வாங்ழிக்கு.. ங்ளை வம்புக்கு இழுக்லைன்னா உங்ளுக்கு ூக்மே ராதே.."
"ஆமாமா உங்ளை வம்புக்கு இழுக்சை உங்ளுக்கென்ன... எங்லை இல்மொட்டையாவுது...?ங்ளுக்கென்பாப்பா மாதிரி ந்துட்டு ீப்பா மாதிரில்யிறிங்க.. உங்க்கா பாரு ருப்பு புவைசுதிகிட்டு வெளியிநின்னா சின்ட்டக்ஸ்னு நினைச்சிகிட்டு தண்ணி புடிக்குடம்லாம் எடுதுட்டு ந்துடாறாங்க..."
" அக்கா... கொஞ்சம் கொதிக்கிரணடியை எடுதிட்டு வாயேன்..."
" ீ எஸ்கேப்..." மாமா ஓட்டம் பிடிதார்.
" என்ங்க... நிமாவே சொல்லுங்க... ஆண்ளுக்கு மட்டும் ஏன் ீக்கிமே சொட்டை விழுது...?
" ம்...   பிசாசு மாதிரி இருக்கற பொண்ணுங்களை கல்யாணம் பண்ணிக்கிறதாலதான் ..."
"  ஜோக்கு... நான் ரசிக்கிற மூடில இல்ல... சீரியஸா கேட்கிறேன்.. காமராஜர் கல்யாணமே பண்ணிக்கலை அவர் தலை எப்படி வழுக்கையாச்சாம்...?"
"  அறிவு ... நீ வயசான காமராஜர் போட்டோவையே பாட புக்ல பார்த்து பார்த்து முடிவு பண்ணிட்டியா... காமராசருக்கெல்லாம்  வயசாயி வழுக்கை ஆச்சி... ஆனா....
" என்ன ஆனா...நோனா...?"
" ம்.. நாங்கெல்லாம் குழந்தைகளுக்கு அப்பாவா இருக்கும் போதே அப்பப்பாவா இல்ல மாத்தி விட்டுடறிங்க...?"
"சரி... சரி.. ரொம்ப பீல் பண்ணாதீங்க ... நாளைக்கு எதாவது ஒரு வழி கண்டுபிடிக்கிறேன்..."
....
" என்னங்க... இங்க பாருங்களேன்... எதோ அமேசான் காட்டில தயாரிக்கறாங்களாம்... கேரண்டியா முடி கொட்டாதாம்... பாட்டிலோட விலை இரண்டாயிரம் ரூபா தாங்க..."
"என்னாது... இரண்டாயிரம் ரூபாயா... காட்டில தயாரிக்கறான்னு இத நம்பி வாங்கி ஆறு மாசம் பூசிகிட்டா நான் ரோட்டில நிக்க வேண்டியதுதான்... போய் உருப்படற வேலைய பாரு..."
" ஆமா துட்டே செலவு ஆக கூடாதே உங்களுக்கு...? இந்துலேகா ஆயில்  கூட பரவாயில்லையாம்  அதையாவது வாங்கி பூசலாமில்ல..."
" ம் அது மட்டுமென்ன நானூறு ரூபா..."
" ஆனாலும் அது கேரளாவில் இரு நூறு ரூபாயாம் ங்க.."
" அதுக்கு கேரளாவுல போய் வாங்கிட்டு வரச்சொல்றியா.. லூசு..இப்படியே பேசி பேசியேதான் எங்க தலை காணாம போகுது... கொஞ்ச நேரம் சைலண்ட்டா இருக்கியா..."
"எப்படியோ தொலைங்க... இப்படியே விட்டா சுத்தம் ஆயிடும்.. அப்பறம் ரோட்ல போற வர்றவன்லாம் உங்களை நிக்க வச்சி தலை சீவிக்குவான்..."
"ஏனாம்.."
"கண்ணாடி மாதிரில்ல மண்டை பள பளக்கும்.."
" எவனாவது சீவிக்கிட்டும்... எனக்கு எண்ணெய்... சீப்பு மிச்சமாகுதுல்ல... போ போய் டிபனை செய்ற வழியை பாரு நீ கூடத்தான் குஷ்பூ ரேஞ்சுக்கு 80 கிலோ போயிட்டிருக்க... நான் என்ன உன்ன திரிஷா மாதிரி ஆவனும்னா சொல்லிட்டிருக்கேன்..?
என்னா சொன்னிங்க....
மானாட மயிலாட ஸ்டார்ட்...
" அப்படி போடு போடு .. " பூரிக்கட்டை நான் எடுக்க மேடையை (வீட்டை)சுற்றி சுற்றி அவர் ஆடிக்கொண்டிருந்தார்.
*********************
திருமணமான ஆண்கள் கவனிக்கவும் என்றவுடனே விழுந்தடிச்சி படிக்க வந்தவங்களுக்கு நன்றி!
கவலையே படாதீங்க... இருக்கவே இருக்கு ஹேர்-பிளாண்ட் போய் நட்டுக்கங்க..! தண்ணியே ஊத்த வேணாம்  பச்சை  பசேல்னு அப்படியே இருக்குமாம்.

(  வெறும் நகைச்சுவைக்காக மட்டுமே எழுதப்பட்டது. ஸோ யாரும் கோவிச்சுக்காதீங்க )