Friday 24 May 2013

அப்படி என்ன நேரில் பேசாமல் போனில் பேசிய விஷயம்...?








சொல்ல வரும்போதெல்லாம்
சொல்ல நினைத்தது-
மறந்து விடுகிறது…
பார்க்கும் போது
கோபித்து கொள்வான்..
நேரில் சொல்வதற்கென்ன..?
அப்புறமாய்-
அலைபேசியில் சொல்வதுண்டு

  “ என்னங்க.. காபி பொடி
சொல்ல மறந்துட்டேன்..
மறக்காம வாங்கிட்டு வந்துடுங்க…!
 ******************************
ஏதோ விஷயமாக்கும் கேட்க வந்தவங்களுக்கு…
புரோவிஷன் லிஸ்ட் போடும்போதெல்லாம் எதையாவது மறந்துடுவேன்.. என் கணவர் கடையில் பாதி பொருளை வாங்கிட்டு இருக்கும் போதுதான் போனை போட்டு இப்படி சொல்வேன்… அப்புறம் அவர் கத்துவார் வீட்ல இருக்கும் போதெல்லாம் சொல்லாத… ஒரு ரூபா வேஸ்ட் பண்ணி போன்ல சொல்லுன்னு….!
( இனிமே டைட்டிலை நம்பி வரக்கூடாதுப்பான்னு நிறைய வாய்ஸ் கேட்கறா மாதிரி இருக்கு… அப்படில்லாம் கோச்சுக்க கூடாது.. இந்நேரம் ‘உர்’ ருன்னு இருந்த உங்க முகம் கொஞ்சம் குறும்பு சிரிப்போட மலர்ந்ததா இல்லையா…?)