Saturday 11 May 2013

வெயில்லயும் கப்பல் விடுவாங்கலாமில்லே.. போவட்டும் விடுங்க..!

இலை நுனி
இசைத்த
மழைத்துளியின்
சங்கீதத்தில்
வீதியை எட்டிப்பார்த்து
உன் விழிகளின் பாவனை..

கட்டவிழ்த்த  சின்ன ஆசையாய்
ஓடும்  நீரில்
நீ விடும் காகித கப்பல்
ஒரு போதும் செல்வதில்லை
என் வீட்டைதாண்டி..

உனக்கு தெரியாது..
என் காதலை நிரப்ப
நான்  
கடத்தி வைத்திருப்பது...!



( கொளுத்தர வெயில்ல இதெல்லாம் ஒரு கவிதை...)
  
 ஹா... ஹா.. கவிஞர்களால் (நான்...?)  வெயில்ல நனையவும், மழையில காயவும்  முடியும்ங்க... அதுக்கு ஏங்க இப்படி திட்டறிங்க?

எப்படியோ போங்க காதலர்கள் கனவிலயாவது மழையில் நனைஞ்சி போறாங்க.... நாம  அதை வேடிக்கை பார்த்துக்கிட்டு காய வேண்டியதுதான்...