Tuesday 16 October 2012


கவிஞர் சுரதாவின் காதல் விளக்கம்:

இந்து, புராண இதிகாசங்களை மட்டும் புரிந்து கொள்வான். கிறித்தவன் பைபிளை மட்டும் புரிந்து கொள்வான். முகம்மதியன் குரானை மட்டும் புரிந்து கொள்வான். ஆண்டவனை புரிந்து கொள்வதிலும் இப்படி பாகுபாடு உண்டு. ஆனால் இவர்கள் எல்லாருமே காதலை புரிந்து கொள்கிறார்கள் இல்லையா? எனவே காதலுக்கு ஆண்டவனை விட பரப்பு அதிகம். பக்தியை கூட நாயக் நாயகி பாவத்தில் பாடினால்தான்  நம் பக்தர்களுக்கு புரிகிறது. காதல் ஆண்டவனுக்கும் அறிமுகமாக அமைகிறது. காதல் நிலை பேறு பெற்ற சப்ஜெக்ட் . பாமரன் முதல் படித்தவன் வரை எளிதில் புரிந்து கொள்ள கூடிய பொருள். என் பாடல்களில் காதல் உணர்ச்சிகள் அதிகம் இருக்கும்.

( பாக்யாவில் வெளிவந்தது)