Tuesday 4 December 2012

உயர்ந்த உள்ளம்







ஏழ்மையால் துவண்ட உள்ளங்களுக்கு
தேடிப்போய் உதவிகள் செய்தவர்.!
தன் வருவாயையும் தனக்கென கொண்டதில்லை
தன்னை தேடி வந்த கோடிகளையும்-
 நற் பணிக்கே ஈன்றவர்..!
எளிமை கொண்ட மனிதன்
வலிமையான  சமுதாய  தொண்டன்..!
திரு.பாலம் கல்யாண சுந்தரம் பற்றி  தெரிந்தவர்களுக்கு  அவர்கள் சமுதாய தொண்டினை நினைவுப் படுத்தவும், தெரியாதவர்களுக்கு அறிந்து கொள்ளவுமே இப்பதிவு.
"பாலம் ஐயா" அவர்கள் நெல்லை மாவட்டத்துக்காரர். 
இவர் மாணவராக இருந்த போதே இந்தியாவிலே தேசிய பாதுகாப்பு நிதிக்கு நன்கொடை அளித்த முதல் மாணவன் என்று கல்யாண சுந்தரம் தமிழ்நாட்டுக்கே பெருமை சேர்த்துள்ளார்.
 ஸ்ரீவைகுண்டம் குமர குருபரர் கலைக்கல்லூரியில் நூலகராக பணியாற்றியவர்.
தனக்கு வந்த பென்ஷன் தொகை 11 லட்சம் ரூபாயை அப்படியே குழந்தைகள் நல நலநிதிக்காக தந்தவர்.
அமெரிக்கா வழங்கிய 30 கோடி ரூபாயை உலக குழந்தைகள் நலனுக்காக கொடுத்தவர்.
ஓட்டல் ஒன்றில் ஊழியராக வேலை செய்து அதன் வருமானத்தை மற்ற நற்பணிகளுக்காக கொடுத்தவர்.
சூப்பர் ஸ்டார் ரஜினி இவர் நற்பண்புகளை கண்டு "இவரை தந்தையாக" தத்து எடுத்து வீட்டில் வைத்திருந்தார். தன்னை சந்திக்க வரும் அறிஞர் பெருமக்களை சுதந்திரமாக சந்திக்க முடியவில்லை என்று ஒரு சிறிய அறையில் தங்கி உள்ளார். 
இவரின் தொண்டுகள்:
ஏழை எளிய மாணவர்களை தத்து எடுத்து கொள்ளுதல்.  மாணவ மாணவியர்களின் கல்வி வளர்ச்சிக்கு சீருடை, நோட்டு புத்தகம் வழங்குதல்

  10 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வில் மாநில அளவில் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெறும் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு பரிசு வழங்குதல்.

  பள்ளியில் ஒவ்வொரு வகுப்பிலும் நல் ஒழுக்கம், பொது அறிவு, அதிக மதிப்பெண் ஆகியவற்றுடன் தேர்வு அடையும் மாணவர்களுக்கு பரிசு வழங்குதல்.

அறிவு பரப்பும் ஆக்க பணியில் அயராது உழைக்கும் திரு கல்யாண சுந்தரனாரின் கடமை உணர்வு பாராட்டுதற்குரியது.