Wednesday 5 December 2012

யுகந்தோறும் காத்திருப்பேன்…!

காத்திருத்தல் அலுப்பான
விஷயம்தான்-
காதல் வராத வரை..!
 நொடிகளும், நிமிடங்களும்
கரைய.. கரைய..
விழிகள் மட்டும்
திசையில்  தேங்கியிருக்கும்..
வந்து விட்டால் பேசிக்கொள்ள
வராது போனால்
திட்டி கொள்ள
 ஒத்திகை அரங்கேறும்..
கணங்கள் கூடினாலும்
காத்திருத்தல் அலுப்பதில்லை-
காதலில்..!
 ******

அன்பே..இன்றும்
தாமதமாய் வா..
நேற்று போலவே
மன்னிப்பாய்…
முத்தமொன்று 
கிடைக்குமென்றால்..!
********