Monday 18 March 2013

சைதாப்பேட்டை கவிஞர் ...






சைதாப்பேட்டை கோவிந்தசாமி ஒரு பெரிய கவிஞரை  கடத்திட்டு போய்,

" இந்த பாருய்யா.. பயந்துக்காத ... எனக்கு ரொம்ப நாளா  கவித எய்தனும்னு ஆச... நான் சொல்லிக்கரத அப்படியே எய்தி காமி... இன்னா..?. அப்பறம் நீ  நடய கட்டிட்டு போய்க்கினே இருக்கலாம்......

ம் சொல்றேன் எய்திக்க.....

இன்னிக்கு என் லவ்வர்க்கு பொறந்த நாள் பா. அதான்  நெல கொள்ளலை.. தோ கொஞ்ச் நேரத்துல வந்துடும்... இந்த பீச் பூரா லவ்வருங்கதான் வெய்ட் பண்ணினுகிறாப்புல.. நானும் காத்துக்கினுதான் இருக்கன்.. என்னமோ போப்பா ஆளு வராதப்ப இந்த வாட்ச்சி கெழவனாட்டாம் நவுருது.. வந்து அதுங்கூட பேசிக்கிட்டிருந்தா.. கொமரனாட்டாம் ஓடி பூடுது.. அப்பால லேட் ஆயிடுச்சின்னு போய்டும். ம் இங்க பாருய்யா கண்ணுலயே பேசிட்டிருக்காங்க..  எவ்வளவு நேரமா குந்திக்கினு இருக்கிறது? அதான் மணல்ல எதயம் வரைஞ்சிட்டிருக்கேன்.. அதோ அந்த புள்ள வந்துடுச்சி.. அத்த பாத்தங்காட்டியும் சுத்தி ஒண்ணுமே தெரியலைப்பா.. அது மட்டும்தான் என் கூட இருக்காப்பல கீது. அப்பாலிக்கா அது எப்பவும் சுடிதாருதான் போடுமா பொறந்த நாளைக்கு நான் பாண்டி பஜார்ல வாங்கி குடுத்த பொடவைய இன்னிக்கு கட்டிக்கினு வந்துட்டு  புடவையில அழகா இருக்கனான்னு கேக்குது..  எனக்கு ஒரே கன்பீஸ் பொடவையில அது அழகா இல்லாங்காட்டி அது கட்டினதால அந்த பொடவைக்கு அழகான்னு.. ...

இன்னா எய்திட்டியா? கூட எதனா ஒரு லைன் சேர்த்துக்க...




இன்று என் காதலி பிறந்த நாள்
இருப்பு கொள்ளவில்லை எனக்கு
‘கொஞ்ச’ நேரத்தில் கிடைத்து விடும்
அவள் தரிசனம்.!

கடற்கரை காத்திருப்பு
காதலர்களுக்கானது..
காத்திருக்கிறேன்..

காத்திருக்கும் நேரங்களில்
கிழவனை போல  நகர்ந்து
காதலி வந்து விட்டால்
வாலிபனாக ஓடும்
நேரங்களை சபிக்காமல்
என்ன செய்ய…

அவரவர் வேலையை யார் செய்கிறார்..?
கண்கள் பேசிக்கொள்வதும்
உதடுகள்  சந்தித்துக் கொள்வதும்
இங்கேதான் நடந்து கொண்டிருக்கிறது..!

மணலை ரிகையாக்கி இதயம்
வரைந்து கொண்டிருக்கையில்
அவள் நுழைந்துவிட்டாள்…
கடற்கரை காலியானது

என் சுடிதார் தேவதை
கேட்டாள்
நீ  பரிசாக கொடுத்த
புடவையில்.. அழகாய் இருக்கிறேனா?

சேலையில் அவள் அழகா
அவளால்  சேலைக்கு அழகா
இரண்டுமாய் யோசிக்க
இடையில் தெரிந்த இடையில்
சந்தேகம் தீர்த்தது.
 ************************

( சிரிப்பா இருக்கா? டுப்பா இருக்கா? எதுவா இருந்தாலும் ஜஸ்ட் இது காமெடிதான்...!)