Tuesday 2 April 2013

உஸ்..வெய்யில் கண்ணை கட்டுதே...!

அறைக்குள் முடங்கி
கிடந்தாலும்
அம்மாவின்  வாசம்
சொன்னது.
வத்தலும், வடாமும்

காகத்தை  விரட்ட
கருங்குடை ஒன்று
மொட்டை மாடியில்
சிடு சிடுப்பாய் உட்கார்ந்து..!

சாயுங்காலத்திற்கு காத்திருக்காத
துரத்தலில் தேடுகிறேன்
சாலைகளில்
தொலைத்த மரங்களை..

நிழல்  தேசங்களுக்கு
அடைக்கலம் புகுகையில்
புறமுதுகிட்டு ஓடாத 
 சூரிய காந்தி பூக்ளின் பரிகாசம்..!