Wednesday 29 January 2014

இது ஏன் நடந்துச்சு....? பதில் சொல்லாம போறவங்க எல்லாம்..........





கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி(?) நடந்துச்சு அந்த சம்பவம்... அந்த பெண்னை பார்த்துட்டு போன  மாப்பிள்ளை எப்படியாவது அந்த பொண்ணுகிட்ட பேசி இம்ப்ரஸ் பண்ணனும்னு போன் பேசியது..

பெண்: ஹலோ

மாப்பிள்ளை: ஹலோ நாந்தாங்க..  “...   !”

பெண்: அப்பாவை கூப்பிடனுமா..?

மாப்பிள்ளை: இருங்க.. அதுக்குள்ள அப்பாவை கூப்பிட்டு பயமுறுத்தாதீங்க... சும்மா உங்க கிட்ட பேசனும்னுதான்... நீங்க பூச நட்சத்திரமாமே?

பெண் : ஆமாம்

மாப்பிள்ளை: நானும் பூச நட்சத்திரங்க... ராசி?

பெண்: கடகம்

மாப்பிள்ளை: நானும் கடக ராசிங்க.... உங்களுக்கு பிங்க் கலர்தான் பிடிக்குமாமே?

பெண்: ஆமா..

மாப்பிள்ளை : எனக்கும் பிங்க் கலர்தான் புடிக்கும்ங்க.. உங்களுக்கு இலக்கியம்னா ரொம்ப புடிக்குமாமே..?

பெண்: ஆமா

மாப்பிள்ளை:   நானும் கதை, கவிதைன்னா ரொம்ப விரும்பி படிப்பேன்ங்க...  உங்களுக்கு என்னல்லாம் புடிக்கும்..?

பெண்: நிலா, பூ, தென்றல்.. சூடா பஜ்ஜி.. மழை புக்ஸ்,.......... etc.....

 மாப்பிள்ளை : அய்யோ... இதெல்லாம் எனக்கும் கூட பிடிக்கும்ங்க ...எல்லா விஷயத்திலயும் நாம ஒரே மாதிரி இருக்கோம்ல...?

பெண்: அது இருக்கட்டும் நான் லூசு ... அப்ப நீங்க?

மாப்பிள்ளை: நானும் லூசுங்க... உங்களுக்காக!

அப்புறமென்ன ரெண்டு லூசுங்களுக்கும் கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க...!

ஆனா அப்புறமா இந்த லூசை ஏன் தான் கட்டிக்கிட்டோமோன்னு ரெண்டு லூசும் மாத்தி மாத்தி லூசுத்தனமா சண்டை போட்டுக்கிதுங்களாம்...

இதுக்கெல்லாம் என்ன காரணம்? பதில் சொல்லாம போறவங்க எல்லாம் உண்மையா லூசு லூசு... லூசு...!

(  அ.உ பாஸ் நாங்களும் மொக்கையா சொல்வோம்ல...???!!!)