Wednesday 7 August 2013

அவர்கள் யாரெனில்....

 
 நீண்ட கால இடைவெளிகளில்

இப்படி ஒரு சந்திப்பு

கல்யாணம் , காட்சியென....
அவர்களுக்காய் அமைந்து விடுகிறது...


அவனிடம் பேச நினைப்பதை எல்லாம்

ஒத்திகை பார்க்கிறாள்... அவள்.


காணும்போது  ஏனோ அரங்கேற மறுக்கிறது.

காயபட்டு விடுமோ என்ற அச்சத்தில்..!


பொய்யாய் சிரித்து சுகம் சொன்ன

அவளுக்கு-

தானும் சுகமே சொல்லி சிரித்த

அவன் மனதின் நெருடல்-

பேருந்து இருக்கையில்...
பலமாய் சிரித்தது..
நலமாய் நடித்ததில்...!  

அசையா சொத்து பிரித்த போது..
அசையும் ‘சொத்தை’யாக
அவன் பெரிய மகனுக்கும்,
அவள் சின்ன மகனுக்கும்

பங்கு போனவர்கள் ... அவர்கள்..!