Wednesday, 24 October 2012

 



ஆயுத பூஜை, விஜயதசமி இந்த நாட்கள் விசேஷமாக இருக்கும். வீடு, அலுவலகம், தொழிற்சாலை எங்கும் தூய்மை செய்யப்பட்டு விளக்குகளால் அலங்கரிக்கப் பட்டு ஜொலிக்கும். வ‌ழிபாடு செ‌ய்வத‌ற்கு மு‌ன்பு, வ‌ழிபடு‌ம் இட‌த்தை தூ‌ய்மை‌ப் படு‌த்த வே‌ண்டு‌ம். ச‌ந்தன‌ம், தெ‌ளி‌த்து கு‌ங்கும‌ம் இட வே‌ண்டு‌ம். சர‌ஸ்வ‌தி‌யி‌ன் பட‌த்‌தி‌ற்கு‌ம்,  படை‌க்க‌ப்பட வே‌ண்டிய பொரு‌ட்களு‌க்கு‌ம் ச‌ந்தன‌ம் தெ‌ளி‌த்து கு‌ங்கும‌ம் இ‌டவு‌ம். பட‌த்‌தி‌ற்கு பூ ‌க்க‌ள் வை‌த்து அல‌ங்க‌ரி‌க்க வே‌ண்டு‌ம். அன்னையின் பார்வையில் புத்தக ங்களை வைத்து அதன் முன்பாக வாழையிலை விரித்து அதில் படையலுக்காக சமைக்கப்பட்டவைகளை  வைக்க வேண்டும்.  சுண்டல், சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, எலுமிச்சை சாதம் போன்றவ‌ற்றை கலைவாணிக்கு நைவேத்தியங்களாகப் படைக்கலாம். வாழை இலையை வைத்து அதில்  பொறி, கடலை, அவல், நாட்டு சர்க்கரை, பழங்களை வைக்க வேண்டும். செம்பருத்தி,  ரோஜா, வெண்தாமரை மலர்கள் அன்னைக்கு உகந்த மலர்களாகும். இவற்றால் மாலைகள் தொடுத்து  அன்னைக்கும், அவள் உறைந்திருக்கும் புத்தகங்களுக்கும் அணிவித்தல் வேண்டும். எதற்கும் விநாயகரே  முதலானவர். எனவே மஞ்சளில் பிள்ளையார் பிடித்து பூஜையில் வைத்து விநாயகரை வணங்கிய பின்னரே சரஸ்வதிக்கான பூஜையை ஆரம்பித்தல் வேண்டும். பூஜையில் கலசம் வைத்தும் கலைவாணியை வணங்கலாம். கலசம் வைத்து அதில் அம்பிகையை முறைப்படி எழுந்தருளச் செய்து பூஜிப்பதால் கூடுதல் நலன் கிடைக்கும். பூஜையின்போது  வீட்டில் உள்ள குழந்தைகள், பெண்கள் உட்பட அனைவரும் கலைவாணிக்குரிய பாடல்களைப் பாடி வணங்கலாம். நவராத்திரி  நாட்களில்  அன்னையின் அருள்பெற ஒன்பது நாட்களும் விரதமிருந்து பூஜிக்க  இயலாதவர்கள் சரஸ்வதி பூஜையன்று மட்டும் அம்மனை பூஜித்து வணங்கினால் போதும். அம்பிகையின் அருள்  பூரணமாய் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
ஆயுத பூஜை: ஆயுதம் என்பதன் உண்மையான பயனை உணர்த்தத்தான் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. வாழ்வில் நம் உயர்வுக்கு உதவும் ஆயுதங்களை போற்றும் விதம் அவற்றையும் இறைபொருளாகப் பாவித்து வணங்குவதே ஆயுதபூஜை . ஆயுத பூஜையன்று சிறிய கரண்டி முதல் தொழில் இயந்திரங்கள் வரை எல்லா வகை தொழில் உபகரணங்களையும் கழுவி சுத்தமாகத் துடைத்து தேவையெனில் வண்ணம் தீட்டி, எண்ணைப்  பொட்டு வைத்து பூஜைகள் செய்து அவற்றுக்கு ஓய்வு கொடுப்பதும், பிறகு எடுத்து தொழிலுக்குப் பயன்படுத்துவதும் ஆயுதபூஜையின் சிறப்பம்சமாகும். ஆயுத பூஜையன்று எல்லா ஆக்கப்பூ ர்வமான காரியங்களுக்கு மட்டுமே இந்த உபகரணங்கள், ஆயுதங்களை பயன்படுத்துவோம், மற்ற அழிவு செய்கைகளுக்கு பயபடுத்தமாட்டோம் என்று உறுதி எடுத்துக் கொள்வோம். விஜய தசமியன்று புதிதாகத் தொழில் தொடங்குவோர், கல்வி பயில ஆரம்பிப்போர் தங்கள் பணிகளை ஆரம்பித்தல் மேன்மை தரும்.

பள்ளிக்கூடம் படிக்கிற காலத்துல புக்சை பூஜையில இரண்டு நாளைக்கு அப்படியே வைச்சுடுவோம். விஜய தசமி முடிந்து மறு நாள்தான் புத்தகத்தை எடுக்கனும்னு அம்மா சொல்வாங்க. அப்ப செம ஜாலியா இருக்கும். ரெண்டு நாளைக்கு புக் எடுத்து படிக்காம விளையாடிகிட்டு இருக்கலாமில்ல..! 
சில கடைகள்ல பூஜை போட்டுட்டு அன்னிக்கு வியாபாரம் பண்ணாம இருப்பாங்க. இந்த E.B காரங்க வருஷத்துக்கும் சேர்த்து பூஜை போட்டுட்டு கரண்ட்டை கட் பண்ணி வைக்கிறாங்களோ..? 


Wednesday, 17 October 2012

கவிதை



 










அரை மணி நேரமாய் பேசுகிறாய்..
பேலன்ஸ் குறைந்து விட போகிறது
அலை பேசியை அவசரமாய் துண்டிக்கிறாய்..
மீண்டும் அழைக்கிறேன்..
என்னிடம் காதல் நிறைய இருப்பதால்..!

கவிதை



எனக்கு
ஞாபக மறதி அதிகம்
 என்கிறார்கள்..
எப்படி சொல்வேன்.
உன் நினைப்பில்
என்னை மறப்பதை..?
கவிதை



தோற்று போவது பிடிக்கிறது
சிறை படுவது-
உன்னிடம் என்பதால்..!
கவிதை



தினம் தாக்குகிறாய்
வலிக்கவில்லை..
உன் அழகான விழிகள்..!

Tuesday, 16 October 2012


கவிஞர் சுரதாவின் காதல் விளக்கம்:

இந்து, புராண இதிகாசங்களை மட்டும் புரிந்து கொள்வான். கிறித்தவன் பைபிளை மட்டும் புரிந்து கொள்வான். முகம்மதியன் குரானை மட்டும் புரிந்து கொள்வான். ஆண்டவனை புரிந்து கொள்வதிலும் இப்படி பாகுபாடு உண்டு. ஆனால் இவர்கள் எல்லாருமே காதலை புரிந்து கொள்கிறார்கள் இல்லையா? எனவே காதலுக்கு ஆண்டவனை விட பரப்பு அதிகம். பக்தியை கூட நாயக் நாயகி பாவத்தில் பாடினால்தான்  நம் பக்தர்களுக்கு புரிகிறது. காதல் ஆண்டவனுக்கும் அறிமுகமாக அமைகிறது. காதல் நிலை பேறு பெற்ற சப்ஜெக்ட் . பாமரன் முதல் படித்தவன் வரை எளிதில் புரிந்து கொள்ள கூடிய பொருள். என் பாடல்களில் காதல் உணர்ச்சிகள் அதிகம் இருக்கும்.

( பாக்யாவில் வெளிவந்தது)

Sunday, 7 October 2012

“ அவள் பணக்காரி...! "

சிறுகதை:
                                    அவள் பணக்காரி...!
              “ ஷைலு.. இன்னிக்கு எல்லாமே உன் மெனுதான்..  எதையாவது ஆர்டர் பண்ணு..” தருண் மெனு கார்டை நீட்டினான்.
ஷைலு புன்னகையை உதிர்த்து ஆராய்ந்து கொண்டிருந்தாள். டிஸைனர் சாரியில் தேவதையாய் தெரிந்தாள்.
ம்.. ரொட்டி பனீர், அப்புறம் ரவா மசாலா..”
சொல்லிவிட்டு காத்திருந்த வேளையில் அவர்கள் மேசையில்  காலியாக இருந்த இரண்டு நாற்காலிகளில் அந்த தம்பதிகள் உட்கார்ந்தனர்அந்த ஆள் மக்கலாக பழுப்பேறிய சட்டையுடன், அந்த பெண் ஒரளவு பவுடர் பூசி தலையில் மல்லிகை வைத்து கொண்டு புது புடவையோடு.. மிஞ்சி போனால் இரு  நூறை தாண்டாது.
புள்ள.. பொறந்த நாள் அதுவுமாஉனக்கு புடிச்சதா சாப்பிடு.. என்ன வோணூம்னாலும் வாங்கிக்கதுட்ட பத்தி கவலைப் படாத..”
போ மாமா.. அதுக்குன்னு இந்தா பெரிய ஓட்டலுக்கு கூட்டிட்டு வருவே…? வீணா எதுக்கு செலவு பண்றே…?  செல்லமாய் கடிந்தாள்.
பிறகு அவனை பூரி, மசால் தோசை என்று ஏகத்துக்கும் வரவழைத்தான். இருவரும் தட்டை வழித்து சாப்பிட்டு கொண்டிருந்தார்கள். அவர்கள் சாப்பிட்ட விதம் ஷைலுவிற்கு எரிச்சலை தந்தது.
மெல்ல தருணின் காதில் கிசு கிசுத்தாள், “ நாம வேறு டேபிளுக்கு போகலாமா..?”
அதெல்லாம் நல்லாருக்காது. சர்வர் கொண்டு வந்து வச்சாச்சிபேசாம சாப்பிடு..”
என்னால முடியாது.. ஓண்ணு வேற டேபிளுக்கு வாங்க இல்ல நான் சாப்பிடலை..”
சரி சாப்பிடாட்டி போதருணேஇரண்டையும் சாப்பிட்டான். அவள் கோபமாக அந்த பக்கம் திரும்பி கொண்டாள்.
எதிரில் உட்கார்ந்திருந்த அந்த பெண் வெகுளியாய், “ என்ன சார்.. அவங்களை விட்டுட்டு நீங்க மட்டும் சாப்பிடறீங்க…”
இல்லங்க அவங்களுக்கு வயிறு சரியில்லையாம்…” சமாளித்தான்.
சாப்பிட்டு கை கழுவும் போது அந்த பெண், “  என்ன மாமா.. தினந்தான் நான் உன்னைய நினைச்சி சந்தோஷமா இருக்கேன்…? பத்து நாள் உழைப்பை ஒரே நாள்ல செலவு பண்ணனுமா..?
ஏய் சும்மா செலவை பத்தியே யோசிச்சிட்டிருக்காத ..  எனக்கு மட்டும் உன்னை மகாராணி மாதிரி பார்த்துக்கனும்னு எண்ணம் இருக்காதா..?   சிரித்துக் கொண்டே கை கோர்த்துக் கொண்டு கிளம்பினார்கள்.
காரின் கதவை கோபமாக சார்த்திவிட்டு சீட்டில் உட்கார்ந்த ஷைலு, என் பர்த்-டே அதுவும் எங்கூட சேர்ந்து சாப்பிடாம... என்னை விட்டுட்டே சாப்பிட்டங்க இல்ல..? அந்த பிச்சைக்காரங்களுக்கு வேற ஹோட்டலா கிடைக்கல... நம்ம எதிரே உட்கார்ந்து என் சந்தோஷத்தையே கெடுத்துச்சுடுங்க..  அந்தாளு குளிச்சானோ இல்லையோ ஒரே வியர்வை ஸ்மெல்..
அதுவரை பொறுமையா இருந்த தருண், ஏய்.. மனுஷனை மனுஷனா பார்க்காம , புடவை,  நகை வச்சி எடை போட்டு  தரம் பிரிக்கிறே...யாரு பிச்சைக்காரங்க... நீதான் பிச்சைக்காரி  எல்லாம் இருந்தும் இன்னிக்கு உன்னால சாப்பிட முடியலை. அவங்க எதுவுமே இல்லைன்னாலும் சந்தோஷமா வாழனும்னு மனசு இருக்கு பாரு பார்க்க போனா அவங்கதான் நம்மை விட பணக்காரங்க...!
ஷைலு முகத்தை திருப்பி கொண்டு விண்டோ வழியாக பார்த்தாள்,  அந்த பெண் இதழில் புன்னகை  நிரம்பி பெருமையோடு அவன் சைக்கிளில் ஏறி உட்கார்ந்து அவன் தோளை அணைத்து கொண்டு போய் கொண்டிருந்தாள்.

(அக்டோபர் 12-18 பாக்யா)