குட்டிக்கதை : பரிசு
அம்மா
ரெடி மிக்ஸ்
சமையல் போட்டி
ஊர்
ஊராக நடத்தும் பொறுப்பு சமையல் நிபுணர் செல்லம்மாளிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. நிறைய ஊர்களில் பரிசுக்குரிய போட்டியாளரை தேர்ந்தெடுப்பது கஷ்டமாகவே இல்லை. ஆனால் கும்பகோணத்தில் மட்டும் ஐந்து பேர் நல்ல சுவையுடன் தயாரித்திருந்தார்கள்.
அவர்களில் ஒருவரை மட்டும் எப்படி தேர்ந்தெடுப்பது குழம்பித்தான் போனாள். ஐந்து பேரில் நான்கு இளம் பெண்கள், ஒருவர் வயதான பெண்மணி.
அவருடன் வந்திருந்த கணவர் “ இதற்கு போய் என்ன குழப்பம் ஐந்து பேரிடமும் தனித்தனியாக இந்த கேள்வியை கேட்டுப்பார்…” என்று ஒரு யோசனையை சொன்னார்.
ஐந்து பேரையும் வரவழைத்து" சமையல் சுவையாக இருக்க என்ன செய்ய வேண்டும் ?"என்று கேட்டாள்.
"அம்மா ரெடி மிக்ஸில் சமைத்து அதை அழ அழகாக டெகரேஷன் செய்தால் கண்ணை கவரும் ருசி கிடைக்கும் ..."என்று ஒவ்வொரு மாதிரியாக நான்கு இளம்பெண்களும் சொன்னார்கள்.
வயதான பெண்மணி மட்டும், "அம்மா ரெடி மிக்ஸில் சமைத்து அதை அம்மாவின் அக்கறையோடு பரிமாறும் போது சுவையோ சுவை ..."என்றாள்.
என்னதான் சுவையாக சமைத்திருந்தாலும் அதை அன்போடு பரிமாறினால்தான் சாப்பிட முடியும் என்று சொன்ன வயதான பெண்மணிக்கே பரிசு கிடைத்தது.
****
நீங்க வயிறு முட்ட தின்பவர்களா? அப்ப ... உங்க வீட்ல அன்போடு பரிமாறுகிறார்கள். ஸோ அவங்களுக்கு ஒவ்வொரு நாளும் பரிசு எல்லாம் கொடுக்க வேண்டாம் பாராட்டவாவது செய்யுங்களேன்....
( ஆஹா டைட்டில் வந்திடுச்சி...!)
இங்க ஒரு வீட்டு கிச்சன், டைனிங் ...
" என்னங்க சும்மாதானே இருக்கிங்க... இந்த கீரையை கொஞ்சம் கிள்ளுங்களேன்.....
" என்னங்க சும்மாதானே இருக்கிங்க... இந்த தேங்காயை கொஞ்சம் துருவி தாங்க..."
" என்னங்க சும்மாதானே இருக்கிங்க... இந்த காயை கொஞ்சம் பொடியா கட் பண்ணுங்க...."
" என்னங்க..சும்மாதானே இருக்கிங்க. குக்கர் மூணு விசில் வந்ததும் கொஞ்சம் ஆப் பண்ணிடுங்களேன்..."
டைனிங் :
"ஸ்... ப்பப்பா... ஒரு சீரியல் பார்க்க முடியுதா.. நானே எல்லாத்தையும் செய்ய வேண்டியதாயிருக்கு...வந்து கொட்டிக்கங்க..."
ஹா...ஹா....
இதெல்லாம் எங்க வீட்ல நடக்கறதில்லை நம்புங்க.. ஏன்னா நான் எதை போட்டாலும் ...(வாயை திறக்காம) சாப்பிடறாங்களே அதுவே பெரிய ஒத்தாசை.... ஹி..ஹி...!