Sunday 11 November 2012

பொண்ணு எப்படி இருக்கனும்...?



கல்யாண மாலை:

அந்த காலத்துல( நம்ம தாத்தா பாட்டி காலத்துல) எல்லாம் கல்யாணத்துக்கு பொண்ணு பார்க்கிறது எல்லாம் பெரிய விஷயமில்லைங்க. பொண்ணு குணமா இருந்தா போதும்னு பெத்தவங்க முடிவு பண்ணிட்டு தாலியை கட்டுடான்னு சொல்லிடுவாங்க. சம்பிரதாயத்துக்கு பொண்ணு பார்க்க மாப்பிள்ளைய அழைச்சிட்டு போவாங்க. இப்ப மாதிரி பொண்ணு வீட்ல நேர் காணலோ இல்ல.. காபி உபசாரமோ கெடையாது.. . மின்னல் மாதிரி சட்னு பொண்ணு இந்த பக்கமிருந்து அந்த பக்கம் போகும். அந்த கேப்பிலயே மாப்பிள்ளை பார்த்தாலும் சரி பார்க்கலைன்னாலும் சரி விதி அவ்வளவுதான். பொண்ணு பக்கம் சொல்லவே வாணாம். கல்யாணமாகி மூணு மாசம் கழிச்சிதான் புருஷன் முகம் இப்படிதானிருக்குமான்னு தெரிஞ்சுக்கும்.

இந்த காலத்துல இப்படி எல்லாம் நடக்க விட்டுருவாங்களா..?
மாப்பிள்ளை இரண்டு கண்டிஷன் போட்டா மாமியார் ஒரு லிஸ்ட்டே வச்சிருப்பாங்க. பொண்ணு மட்டும் சும்மாவா மாப்பிள்ளையை தனியா கூட்டிட்டு போய் வைவா  நடத்திடும். தினசரி பேப்பர்ல விளம்பரம் ஆரம்பிச்சி, இண்டெர் நெட், டி.வி வரை மணமக்கள் தேடல். அதுவுமில்லாம நவீன சுயம்வரம் வேற . ( சுயம்வரம்னா ராமர் வில்லை ஒடிச்சது மாதிரி இல்லைங்க. எவ்வளவு செலவானாலும் பில்லை கட்டுகிற மாப்பிள்ளையா இருந்தா போதும்  நீங்க செலக்ட்). ஒரு ஹோட்டல்லயோ, கல்யாண மண்டபத்துலயோ கல்யாண அமைப்பாளர் கட்சி கூட்டம் மாதிரி கும்பலை சேர்த்துடுவாரு.. அங்க பேசி யார் யாருக்கு செட் ஆகுமோ அவங்க பேசி ஜோடியா ஆயிடுவாங்க.

இங்க ஒரு கல்யாணமாலையில ஒரு மாமியாராக போறவங்களும், மருமகளாக போறவங்களும்  அவங்க எதிர்பார்ப்பா  என்ன சொல்றாங்க பாருங்க.....?!


மாமியாரின் ஆசை...

பொண்ணு அழகா இருக்கணும்.
நிறைய படிச்சிருக்கணும்.
நல்லா சம்பாதிக்கனும்
குறைவா பேசணும்.
வீட்டு வேலை எல்லாமும் செய்யணும்.
பெரியவங்களோடு அனுசரிச்சி போகனும்.
தனிக் குடித்தனம் பற்றி யோசிக்க கூடாது.
எல்லா விஷயத்தையும் என்னை கேட்டு கேட்டு செய்யனும்
மருமகளின் ஆசை....
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
ரொம்ப அதிகமில்லை..
சிம்பிளா மாமியார் படம்
இப்படி போட்டோவுல இருக்கணும்.

  ( மாமியர்கள் மன்னிக்கவும்... நீங்களும் ஒருகாலத்துல மருமகளா இருந்த போது அப்படிதானே நினைச்சிருப்பிங்க..
மருமகள்களே  நீங்களும் இந்த மாதிரி எல்லாம் நினைக்காதீங்க..  ஒரு நாளைக்கு நீங்களும் மாமியாராக வேண்டி வரும்.)
மொத்தத்தில யாரும் இப்படி நினைக்காதீங்க. 

பெண்ணை மட்டும் வச்சிருக்கவங்க சந்தோஷ பட்டுக்கலாம். ஏன்னா மாமியார்- மருமகன் வம்பு நடக்கிறதா சரித்திரமே இல்லை! ( மாமியா வீட்ல வக்கனையா சாப்பிட்டு மாமி மாமின்னு சுத்தி வர்ற மாப்பிளைங்கதான் உங்களுக்குதான்..!) கொடுத்து வச்சவங்க.  நீங்க!

கொசுறு டிப்ஸ்: ( பெண் பார்க்கிற படலத்தை மொட்டை மாடி வெளிச்சத்துல வைங்க.. வீட்டுக்குள்ள. பெண் பார்க்க போய் உட்கார்ந்தவுடனேயே ஈ.பி காரங்க சொல்லி வச்ச மாதிரி கட் பண்ணிடுவாங்க.. ஏதோ மணிரத்னம் படத்தில வர்ற மாதிரி ஒரு வெளிச்சத்தில  நீங்களோ அவங்களோ ஏமாந்துட போறீங்க...?!)