Monday 5 November 2012

தீபாவளி என்றாலே புதுத்துணி, பட்டாசு, பலகாரம் என்பதுதான்.

தீபாவளி என்றாலே  புதுத்துணி, பட்டாசு, பலகாரம் என்பதுதான்.




ஜவுளிக் கடல்களில் மக்கள் கூட்டம் அலை மோதும். குடும்ப தலைவருக்குதான் இப்ப டென்ஷன்.. பின்ன டூ வீலர்ல முன்னாடி பசங்களையும், பின்னாடி வொய்ப்பையும் அடுக்கி கிட்டு கடை கடையா ஏறி இறங்கனும். ஒரு கடையிலேயே  செலக் ஷன் முடியாது.  இந்த கடையில் நல்லால்லே  வேற போகலாம் வாங்கன்னு ஒவ்வொரு கடையா  ஏறி இறங்கி கடைசியிலே முதல்ல வந்த கடைக்கே நுழைவாங்க.. இங்கேயே பரவாயில்லைன்னு.. என்ன பண்றது  போய்த்தான் ஆகனும். அப்புறம் என்ன பக்கத்துல நீங்க நிக்கறதையே அவங்க மறந்துடுவாங்க. பாவம் நீங்க எவ்வளவு நேரம்தான் நிப்பீங்க இல்ல உட்காருவீங்க.. எப்படியும் பல மணி நேரமாகும்.. அதுக்குள்ள நீங்க வெளியில் போய் நின்னு ப்ரெண்ட் கூட போன்ல பேசுவீங்க… அதுக்கப்பறம்.. என்ன பண்றதுன்னு தெரியாம முழிப்பிங்க.. ரோட்ல சும்மா நின்னாக் கூட சும்மா விடுவாங்களா..  அண்ணா எதுனா கொடுங்கன்னா.. பிச்சைக்காரங்க வந்து வந்து பக்கத்துல நிப்பாங்க( அங்க உள்ள போன பேமிலி மெம்பர்ஸ் பில்லை செட்டில் பண்ணும் போது ஒரு வழியா நீங்களும்….)
ஸார்.. இரண்டு முழம் பத்து ரூபாதான்  வாங்கிக்கங்க ன்னு  மல்லிகை பூவை எடுத்து கிட்டு  மூணு நாலு பேர் மொய்ப்பாங்க.. ( நிக்க விடமாட்டேன்றாங்களேன்னு போனா போகுதுன்னு ஒரு பத்து ரூபாய்க்கு வாங்கிடுவீங்க.. அதுல ஒரு பூவை கிள்ளி வொய்ப் உங்க காதில வைக்கறதுக்கும் உதவும்..?)

வாட்ச்சை திருப்பி திருப்பி எவ்வளவு நேரம்தான் பார்ப்பிங்க.. நேரம் போகல இல்ல..? சரி ரோட்ல  எத்தனை பஸ், ஆட்டோ போகுதுன்னு எண்ணுங்க.. ரோட்ல போற வர்றங்களை வாட்ச் பண்ணுங்க.. அப்ப அப்பதான் அழகா ஒரு பொண்ணு ரோடை க்ராஸ் பண்ணி வர்றதை பார்க்கலாம்னு நினைக்கிறப்ப… உங்க பாக்கெட்ல மொபைல் அதிரும்,
“ என்னங்க எங்க போய் தொலைஞ்சிங்க..? நாங்க எல்லாம் எடுத்து முடிச்சி எவ்வளவு நேரமா தேடிக்கிட்டிருக்கோம்.. வொய்ப் அர்ச்சனையை கேட்டுட்டு கேஷ் கவுண்டருக்கு ஓட்டம். ஒரு வழியா ஷாப்பிங் பையை சுமந்துகிட்டு வெளிய வரும் போது பசங்க கேட்கும், “ மம்மி.. டாடிக்கு இன்னும் எடுக்கலையேன்னு..?  ம்..  இப்பவே எவ்வளவு செலவாயிடுச்சி.. போன வருஷம் எடுத்ததே வீட்ல இன்னும் தைக்காம கிடக்குது.. என்னங்க அத தைச்சிக்கங்க..
உடனே தைச்சுடுங்க இல்லைன்னா அடுத்த வருஷமும்  ரீபிட் ஆகும்.

( உங்களுக்கு பழைய துணிங்கிறது ஏழைகளுக்கு கிழியாத துணி..!  நீங்க பயன் படுத்தாத துணியை ஆதரவற்ற இல்லங்களுக்கு கொடுங்க)

   

பட்டாசு



தீபாவளி பண்டிகையின் போது எச்சரிக்கையுடன் பட்டாசுகளை வெடிக்க வேண்டும். குறிப்பாக பெரியோர்கள் மேற்பார்வையில் குழந்தைகள் பட்டாசு வெடிக்க வேண்டும்.நீண்ட ஊதுவத்தி வைத்து பட்டாசு வெடிப்பது நல்லது. பட்டாசு வெடிக்கும் போது நைலான், சில்க் துணிகள் அணிவதை தவிர்க்க வேண்டும். ஒரு போதும் வெடிக்காத பட்டாசுகளை மீண்டும் கையில் எடுக்கக்கூடாது. எச்சரிக்கையுடன் பட்டாசு வெடித்து, தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாலாம் .

( அக்கம் பக்கம் பிறந்த குழந்தைகள், முதியோர், உடல் நலமில்லாதவர்கள் இருந்தால் அவர்களுக்கு தொல்லை தரும்படி பெரிய பெரிய வெடிக்களை வெடிக்காதீர்கள் உங்கள் சந்தோஷம் அடுத்தவரை துன்புறுத்தாமல் பார்த்து கொள்ளுங்கள்)

பலகாரம்:



பண்டிகை நாட்களில் அன்பை பரிமாறி கொள்ள ஒருவருக்கொருவர் பலகாரங்கள் கொடுத்து உபசரிக்கிறோம்.  நம்ம குடும்ப தலைவிகள் பிஸியா இருப்பாங்க. வீட்ல வாண்டுங்க தொல்லையை சமாளிச்சிட்டு பக்கத்து வீட்டு பாட்டியோடு பலகாரம் செய்ய அடுப்பை பத்த வைப்பாங்க. இந்த அதிரசம் செய்ய மூணு பேராவது வேணும். அப்ப பசங்க சல சலன்னு பேசிட்டு இருந்தா பாட்டி சத்தம் போடும்..." சும்மா இருங்க பேசிகிட்டே சுட்டா எண்ணெய் சட்டி எண்ணை இழுத்துரும்னு சொல்லும்.  என்னோட சின்ன வயசில ஓஹோ அப்படிதான் போலன்னு நம்பியிருக்கேன். அப்புறமா அறிவு கொஞ்சம் டெவலப் ஆன பிறகு  பேசிகிட்டே செஞ்சா கவனம் சிதறிடும் அப்ப பலகாரத்தை  கடாயிலிருந்து எடுக்க லேட்டானா எண்ணையை உறிஞ்சுடும்னு காரணத்துக்காக  சொல்லி வச்சதை பாட்டிங்க இப்படி ஃபாலோ பண்ணுதுன்னு நினைக்கிறேன். சரியா?


தீபாவளி அன்னிக்கு இட்லி, தோசை , பூரியோடு இத்தனையும் சாப்பிட்டா என்ன ஆகிறது..?  நிச்சயம் அஜீரணம் ஆகும். தீபாவளி பலகாரங்களோடு கஷாயமும் சேர்த்து செய்ய வேண்டியதுதான்.

(தீபாவளி பலகாரங்கள்  நம் வட்டத்துக்குள்ளேயே கொடுக்கல்- வாங்கல் இருக்கும் போது நிறைய வீட்டில் அக்கம் பக்கம் தருவது நிறைய சேர்ந்து ஒன்று வேலைக்காரிக்கு தந்து விடுகிறார்கள் அல்லது அப்படியே வீண் செய்து குப்பையில் போடுகிறார்கள். இதை தவிர்த்து  தீபாவளி இல்லாத வேற்று மதத்தினருக்கு கொடுக்கும் போது  பயனாக இருக்கும்.)