Sunday 17 June 2012

இப்படித்தான் சமாளித்தேன்


இப்படித்தான் சமாளித்தேன்


என் மகள் அஸ்வினிக்கு நடிகை ஜோதிகாவை ரொம்ப பிடிக்கும்.
அப்போது இரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள். ஒரு
நாள் திடீரென்று , "ஜோதிகா ஆண்ட்டி நம்ம வீட்டுக்கு வந்தாதான்
சாப்பிடுவேன் " .. என்று அடம் பிடித்தாள். எத்தனையோ விளையாட்டுக்
காட்டினாலும் சாப்பிடாமல் அழ ஆரம்பித்து விட்டாள். என்ன
செய்வதென்று யோசித்த நான் , " ஜோதிகா ஆண்ட்டிக்கு நிறைய
வேலை இருக்காம்.. உன் கூட போன்ல வேணும்னா பேசறாங்களாம்..."
என்று அவளிடம் சொல்லிவிட்டு, வெளியூரில் இருக்கும் தோழி
ஒருவருக்கு ஃபோன் செய்து என் குழந்தையிடம் ஜோதிகா மாதிரி பேச
சொன்னேன். தோழியும் குழந்தையிடம், " சமர்த்தா சாப்பிடு, நான்
லீவ்ல வர்றேன்..." என்று சமாதனப்படுத்த, ஜோதிகாதான் பேசினார்
என்று நம்பிய என் மகள் மகிழ்ச்சியாக சாப்பிட்டாள்.இப்போது அவள்
எட்டாம் வகுப்பு படிக்கிறாள். ஜோதிகாவுடன் போனில் பேசிய
கதையை அவளிடம் இப்போது சொன்னால் , வெட்கத்துடன் சிரிக்கிறாள்.

(ஜனவரி 1-15, 2012 தேவதை இதழில் வெளிவந்தது)