Friday 14 September 2012

கரடி விட்டா நம்பாதிங்க..
உடன் கட்டையை அடியோடு ஒழித்த ராஜாராம் மோகன்ராய் ஒரு நாள் தன் நண்பருடன் சென்று கொண்டிருந்தார்.அப்போது ஒருவன் கரடியை சங்கிலியால் பிடித்து கொண்டு இதோ பாருங்கள் கரடியின் முடி இதை கையில் கட்டி கொண்டாலோ அல்லது மோதிரமாக போட்டு கொண்டாலோ லட்சாதிபதி ஆகி விடுவீர்கள் என்றான்.நானும் ஒரு முடி வாங்குகிறேன் என்று நண்பர் கிளம்பினார்.எத்தனை முடி வாங்கினால் நீங்க லட்சாதிபதி ஆவிர்கள் என்று கேட்டார் ராஜாராம் மோகன் ராய். ஒரு முடி வாங்கினால் போதும் என்றார் நண்பர். ராஜாராம் அதற்கு கூறினார் நண்பரே யோசித்து பாருங்கள் உங்களிடம் ஒரு முடி இருந்தாலே நீங்கள் பல லட்சங்களுக்கு அதிபதியாக முடியும் என்றால் அந்த கரடிக்கு சொந்தக்காரனிடம் எத்தனை ஆயிரம் முடிகள். அவற்றை எல்லாம் அவனே வைத்துக்கொண்டு ஏன் அவன் கோடீஸ்வரனாக கூடாது?  ஏன் தெரு தெருவாய் பிச்சைக்காரனை போல் கூவி கொண்டிருக்கிறான்  என்று கேட்டு நண்பரை யோசிக்க வைத்தார்.நம்பிக்கை வைத்தால் உயரலாம். மூட நம்பிக்கை வைத்தால் முன்னேறவே முடியாது.