Monday 29 October 2012

கண்ணதாசன் நம்பிக்கை:

படித்தது :
கண்ணதாசன்  நம்பிக்கை:

ஆண்டவன் மீதும், சாஸ்திரங்கள் மீதும் நாம் வைக்கும் நம்பிக்கையே மூட நம்பிக்கை என்று சொல்லும் பகுத்தறிவாளர்கள் உண்டு.
அவர்களுடைய நம்பிக்கைகள் எல்லாம் கெட்டிக்காரத்தனம் என்றும் நம்முடைய நம்பிக்கைகள் மட்டும் மூடத்தனம் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.
நம்பிக்கையில் மூட நம்பிக்கை, குருட்டு நம்பிக்கை, கெட்டிக்கார நம்பிக்கை எதுவும் கிடையாது.
மகன் கல்லூரிக்கு கட்டப் போகிறான் என்று நம்பித்தான் தகப்பன் பணம் அனுப்புகிறான். அவன் அதை எப்படியும் செலவழிக்கலாம்.
அழகான ஹோட்டல்..  அருமையான சாப்பாடு ஆரோக்கியமான முறையில் சமைக்கப் பட்டிருக்கும் என்று நம்பித்தான் சாப்பிடுகிறோம். ஆனால் சமையற் கட்டில் என்ன நடந்திருக்குமோ யார் கண்டது?
‘ இவர்   நமது ஒழுங்கான பிரதி நிதியாக இருப்பார் என்று நம்பித்தான் மக்கள் ஒருவருக்கு ஓட்டளிக்கிறார்கள். அவர் எப்படியெப்படியோ மாறிவிடுகிறார்.
நம்பிக்கை வெற்றி பெறும் போது மட்டுமே கெட்டிக்காரத்தனம் போல் காட்சியளிக்கிறது. மற்ற நேரங்களில் அனைத்திலும் அது முட்டாள்தனம்தான்.
ஆண்டவனை நம்புவதிலும் அதே நிலைதான்.
அது தோல்வியுற்றால் மூடத்தனம். வெற்றி பெற்றால் கெட்டிக்காரத் தனம்.
தெய்வ நம்பிக்கையை மூட நம்பிக்கை என்று சொல்வதை பற்றி வருத்தமில்லை. மூடன் என்று சொல்லப்படுபவர்களும், அறிவாளி என்று சொல்லப் படுபவர்களும்  நம்மிடம்தான் வரப் போகிறார்கள் என்ற நம்பிக்கை  தெய்வத்துக்கு இருக்கிறதே..!  யார் என்ன செய்ய..?