Friday 14 February 2014

இப்படி எல்லாம் காதலர் தினம் கொண்டாடறங்க..............



வீட்டில்...........

உஷா : என்னங்க காய் கறி பையில் ரெண்டு ரோஸ் .....?

அன்பு: ஆமா.. நாளைக்கு பிப்ரவரி 14.... ஒரு ரோஸ் பத்து ரூபான்னு சொல்வான்... அதான் இன்னிக்கே அஞ்சு ரூபான்னு வாங்கிட்டு வந்துட்டேன்...  ப்ரிட்ஜ்ல வச்சிடு நாளைக்கு குடுத்து ஐ லவ் யூ சொல்றேன்...

உஷா: அட கஞ்ச பிசினாறி.... அது சரி ரெண்டு எதுக்கு வாங்கிட்டு வந்தீங்க?

அன்பு: ஒண்ணு உனக்கு இன்னொன்ன யாருக்காவது குடுக்க முடியுமான்னு பார்க்கிறேன்.....

உஷா:  நடக்கறதுக்கு காலும் குடுக்கறதுக்கு கையும் இருக்காதுலே.......
---------------

 ஊரில்...........

தீனிப்பண்டாரமான அந்த பெண்ணின் பின்னாடி ஒரு மாசமா அலைஞ்ச ஒருத்தன் காதலர் தினத்திலயாவது சொல்லிடலாமான்னு அவகிட்ட ரோஸை கொடுக்கிறான்.....

தீனிப்பண்டாரம்: ஆமாண்டா காதலை சொல்ல  எல்லாரும் ரோஸ் ப்ளவரைத்தான் குடுக்கனுமா? ஒரு காலிப்ளவரையாவது தரலாமில்ல... பக்கோடா போட்டு திங்கவாவது யூஸ் ஆகும்..?!