Wednesday, 17 April 2013

கிரி..எம்.எல்.ஏ..!


"பாஸ்.."  குரல் கேட்டதும் திரும்பினேன்.

வண்டியை யூ டர்ன் அடித்து அருகில் வந்த கிரிஎன்ன மச்சான் ஊரையே மறந்துட்டியா.. வந்து வருஷக்கணக்கா ஆகுது?”

ம்.. என்ன பண்றது நிறைய வேலைகள்.. எப்படி இருக்கே?”

ரொம்ப நல்லாருக்கேன்.. ஐயா நம்ம வார்டுக்கு கவுன்சிலர் தெரியுமில்ல..”

ம் அம்மா போன் பண்ணியிருந்தப்ப சொன்னாங்க.. என்னால நம்பவே  
முடியலை கிரி.. நீ எப்படி அரசியலுக்கெல்லாம் போனேன்னு..”

அதெல்லாம் அப்புறம் பேசிக்கிடலாம்.. வா காபி சாப்பிட்டு விட்டு வீட்டுக்கு போவே..” வண்டியில் ஏறிக்கொண்டேன்.

என்ன தம்பி சௌக்கியமா”? விசாரித்த நாயரை பார்த்ததும்தான்.. வருடங்கள் கடந்து கொண்டிருப்பது தெரிந்தது. புன்னகைத்து பெஞ்ச்சில் அமர்ந்தேன். இதே கடையில்தான் எங்கள் கூட்டணி இருக்கும் என்னோடு கிரி, முருகு, ஜனா.. வெங்கி .. சுப்பு என்று தினமும் டீ குடிக்கும் சாக்கில் மணிக்கணக்காய் அரட்டை தொடரும். ஆனாலும் கிரி எங்கள் கூட்டணியில் சைலண்ட்டாக இருப்பான். எங்கள் அரட்டையை ரசிப்பதோடு சரி.  எதிரில் வரும் பெண்களை கூட நிமிர்ந்து பார்க்க மாட்டான். அவன் அப்பாவை கண்டால் பயந்து கொண்டு நைஸாக நழுவி விடுவான். 

கவுன்சிலர் தம்பி இந்தாங்க..” நாயர் பவ்யமாக கிரியிடம் க்ளாஸை தரும்போதுதான் அவனை கவனித்தேன். ஆளே மாறியிருந்தான்.. நெற்றியில்  சந்தன கீற்றுடன் தலையை அழுந்த வாரி அக்மார்க் நல்லவன் என்ற பாவனையிலிருந்து மாறியிருந்தான்.  முரட்டுத்தனமும், அதிகாரத்தோரணையும் அவனிடம் ஒட்டி கொண்டிருந்தது.

பாஸ் நாளைக்கு  தோப்பு பக்கமா வாயேன்.. நிறைய பேசலாம் மச்சான்…”

வீட்டிற்கு வந்ததும் அம்மாவிடம் கேட்டேன். “ மா.. கிரி இவ்வளவு மாறிட்டிருக்கான் இல்ல…?”

ஆமாம்டா.. அவனுக்கென்ன.. நல்லா செட்டிலாயிட்டான்..  போன எலக்ஷன்ல தோத்தவன்.. இந்த முறை ஜெயிச்சுட்டான். ஜெயிச்சதும்  நம்ம வீட்டுக்கு வந்து வெள்ளி டம்ளர்லாம் குடுத்திட்டு போனாண்டா…”

  நீ ஏம்மா அதெல்லாம் வாங்கினே?”

நான் எங்க வாங்கினேன்.. எவ்வளவு சொல்லியும் கேட்காம நானும் உங்க புள்ள மாதிரிதானே என்னை வாழ்த்துங்கன்னு வச்சிட்டு போய்ட்டாண்டா..”

எனக்கு என்னமோ மாதிரி இருந்தது. கிரியை நல்லா கேட்கனும் போலிருந்தது.

மறு நாள் தோப்பு பக்கம் போனேன். கிரியுடன் வெங்கியும், சுப்புவும் இருந்தார்கள். கூடவே பாட்டில்களும்.

கிரி.. என்னால் நம்பவே முடியல.. இந்த பழக்கலாம் வேறயா? “

பாஸு இதை போய் பெரிசு படுத்தற? மாற்றம் தான வாழ்க்கை..  எனக்கு சரின்னு படறதை ஜாலியா செஞ்சுட்டு போறேன் மச்சான்…”

ம் குறுக்கு வழியில சம்பாதிக்கனும்னு நீயும் சாக்கடை ஆயிட்டே போலிருக்க…?”

வேற வழி இல்லைடா.. நம்ம குருப்ல வெட்டி பேச்சு பேசிக்கிட்டிருந்தாலும் படிக்கிற நேரத்துல படிச்சி நீ எஞ்சினியரா ஆயிட்டே.. முருகு கணக்கு வாத்தியார் ஆயிட்டான்ஜனாவும் கவர்மெண்ட் உத்தியோகம்.  நாங்க டிகிரி பெயிலாகி வெட்டியா சுத்தி ஒருத்தன் கூட மதிக்கலைடா.. எதையாவது பண்ணனுமே.. அதான் கட்சிக்கு போனேன்.. போன முறை மூணு லட்சத்துக்கு மேல என் பணத்தை போட்டு தோத்து உடைஞ்சிட்டேண்டா
இந்த முறை நான் நிக்கலைன்னேன்வெங்கியும், சுப்புவும்தான் விடலை. எப்படியும் ஜெயிச்சே ஆகனும்னு பக்காவா ப்ளான் பண்ணி வேலை செஞ்சாங்க..

ஆமா என்ன பண்ணியிருப்பிங்கவீடு வீடா போய் கையில் கால்ல விழுந்து ஓட்டு கேட்டிருப்பிங்க…!” எகத்தாளமாய் கேட்டேன்.

  நீ சொன்னது கரெக்ட்தான்..  எப்படியாவது ஜெயிக்கனும் அது மட்டும்தான் தெரிஞ்சது.. தலைக்கு  இருனூத்தி அம்பதுன்னு செலவு பண்ணினேண்டா.. ஆனா போட்ட பணத்தை எடுத்துட்டேன்…”  “.?. இப்ப பாரு ஊருக்குள்ள எனக்கு எவ்வளவு மதிப்புன்னு என்ன விட வயசானவன்லாம் என்ன பார்த்ததும் எழுந்து நிக்கிறான்…”சிரித்தான்.

அவன் சிரிப்பு என்னை எரிச்சல் படுத்தியது, “சரி என்னதான் பண்ண போற..?”

வாய்ப்பு வந்தால் எதிர்காலத்துல நான் அமைச்சரா கூட ஆவலாம். அப்ப நீ எங்கிட்ட என்ன வேணும்னாலும் உதவி கேளு..”

உனக்கு வெக்கமாயில்ல.. இப்படித்தான் பொழைக்கனுமா?”

ஏய்.. என்னப்பா சூடாகிற..?  இப்ப நம்ம வார்டுக்கு சொன்னதெல்லாம் செஞ்சுட்டேன்பா.. “

சரி நீ அடுத்த எலக்ஷன்ல எவன் கால்லயும் விழ கூடாது.. யாருக்கும் ஒத்த பைஸா கொடுக்காம  ஜெயிச்சு காமிப்பா.. நான் உன்ன  நல்ல அரசியல்வாதின்னு ஒத்துக்கிறேன்…”

பெரிய நகைச்சுவையை கேட்டது போல் சிரித்தவன்…” பாஸ் நீ இன்னும் உலகத்த புரிஞ்சிக்காமயே படிச்சிட்டஎவ்வளவுதான் பண்ணாலும் எலக்ஷன் டைமில்  கையை காலை பிடிக்கிறதும்.. ஓட்டுக்கு ரூபா கொடுக்கறதும்தான் அந்த நேரத்துக்கு ஓர்க்- அவுட் ஆகும். .. இதெல்லாம் மாத்த முடியாது. நீ வேணா பாரு..  கூடிய சீக்கிரத்துல நான் எவ்வளவு உயரத்துக்கு போறேன்னு…”

அதற்கு மேல் எனக்கு அவன் பேச்சை கேட்க எனக்கு பிடிக்கவில்லை.

சென்னைக்கு வந்து சில வருடங்களுக்கு பிறகு சித்தப்பா பையன்  

திருமணத்திற்கு என் மனைவி, பிள்ளைகளோடு  ஊருக்கு சென்றேன்.
பேருந்தை விட்டு இறங்கியதும்.. சர்ரென்று நாலைந்து கார் சைரன் ஒலிக்க அந்த சொகுசு கார் கடந்தது.. கிரிதான் தொகுதி எம்.எல். வாம்.

அவன் கார் கண்ணாடியில் தெரிகிறதோ இல்லையோ வழியில் நின்றிருந்தவர்கள் கும்பிடு போட்டு கொண்டிருந்தார்கள்.

நேரம் டா..  அவன் ஒரே முறை கால்ல விழுந்து ஓட்டை வாங்கிட்டு இப்ப கெத்தா அலையறான்.. நம்ம ஜனங்க அஞ்சு வருஷம் அவனை கும்பிட்டு கிட்டு இருப்பாங்க.. ஓட்டுக்கு காசு வாங்கற ஜனங்க இருக்கற வரை அரசியல்ல பிழைச்சிக்கிடலாம்.. “ முணு முணுத்தேன்.”

என்னங்க ஜனங்க ஓட்டுக்கு காசு கொடுக்க வர்றவனை விரட்டி நேர்மையா இருக்கறவனை எல்லாம் அடையாளம் கண்டுபுடிச்சி அரசியல்ல உட்கார வச்சா நாட்டோட தலை எழுத்தையே மாத்தலாம்இல்ல..?” அப்பாவியாய் என் மனைவி கேட்க,

ஆமா நீயும் நானும் மாதிரி ஒரு பத்து பேர் யோசிச்சி என்ன பிரயோஜனம்? வரிசையாய் பறந்த கார்கள் எங்கள் மேல் புழுதி கிளப்பி இருந்தாலும் தலை நிமிர்ந்து நடந்து கொண்டிருந்தேன்

******************
(மேலே உள்ள போட்டோ கூகுளில் எடுத்தது... கற்பனை கதைக்கும் அதற்கும் சம்மந்தம் இல்லை)

Thursday, 11 April 2013

வெற்றின்னு நினைக்கிறது சில சமயம்....



  விஜய் டி.வி  யில்  நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி பார்த்து கொண்டிருந்தேன். அதில்  பிரகாஷ் ராஜ்  வெற்றி, தோல்வி பற்றி  சொல்லிட்டிருக்கும்  போது அவர் சொன்ன ஒரு நிகழ்வை ஏற்கனவே  அவர் எழுதிய  தொடரில் படித்திருந்தேன்………. அதில்  பிரகாஷ் ராஜ் சொல்லியிருந்தது…

காலேஜ் டைமில் நான் தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் நான் இல்லாமல் நாடகங்கள் நடக்க கூடாதுன்னு நினைப்பேன். அது ஹீரோவோ, வில்லனோ   நாடகத்தில் நான் முக்கிய ரோல் பண்ணியாகனும். என்னை  டைரக்ட் பண்ற புரபஸருக்கு என்னை ரொம்ப பிடிக்கும்.  அவர் என்ன எதிர்பார்க்கிறாரோ அதை இன்னும் அழகா, அழுத்தமா அர்த்த பூர்வமா செய்து தர்ற பையன் நான். அப்படி காலேஜ் கல்ச்சுலர்ஸுக்காக   ஒரு நாடகம் அதிலும் நாந்தான்  ஹீரோ.அதுக்கான ரிகர்சல்கள் தினம் நடக்கும்.ப்ளேக்கு ஒரு வாரம் இருக்கும் போது ஒரு   ஞாயிற்றுகிழமை. எனக்கு ரிகர்சல் போக விருப்பமில்லை. திமிர்தான். ஒரு நாள் ரிகர்சல் போகலைன்னா என்னை நாடகத்திலர்ந்து தூக்கிடுவாங்களா என்ன? நான் இல்லாம எப்படி இந்த நாடகம் நடக்கும்? னு மனசுல  ஒரு அரக்கன்  வந்து  சில நிமிஷம் உட்கார்ந்தான்.

என் புரபஸருக்கு  ரொம்ப வருத்தம்.என்னை மறுபடி அவர் ரிகர்சலுக்கு கூப்பிடவேயில்லை. ஒரு வாரம் பேசவுமில்லை. அப்புறம் என் கேரக்டருக்கு வேற ஒருத்தன் நடிக்கிறான்னு சொன்னாங்க. என்னை நாடகத்தில் இருந்து மொத்தமா தூக்கிட்டாங்க. உள்ளே இருந்த திமிர் இன்னும் உக்கிரமா தாண்டவம் ஆடுச்சி. எனக்கு பதிலா நடிக்கிற  பையன் நிச்சயமா என் அளவுக்கு நடிக்கமாட்டான். நாடகம் ப்ளாப் ஆயிடும்னு எனக்கு நல்லா தெரியும்.நிஜமாகவே நாடகம் ப்ளாப்.

ப்ரகாஷ் அந்த கேரக்டரை பண்ணியிருந்தா பின்னியிருப்பாம்பா என்று ஒட்டு மொத்த காலேஜும் எனக்கு ப்போர்ட். ப்ளே சரியில்லைன்னதும்  பசங்க ஸ்டேஜுக்கு முன்னாடி  கத்தி கலாட்டா பண்ண ஆரம்பிச்சிட்டாங்க . அதுல முத ஆள் நாந்தான்.புரபஸரை வெறுப்பேத்த விசிலடிச்சேன்.  நாடகம் தோத்ததுல நான் ஜெயிச்சுட்டேன்னு திமிர்.

மறு நாள் புரபஸர் என்னை கூப்பிட்டனுப்பினார் . கம்பீரமா உள்ளே போனேன்.” பிரகாஷ் உன் அளவுக்கு அந்த பையன் நல்லா பண்ணமாட்டான்னு எனக்கு தெரியும் நாடகம் ப்ளாப் ஆகுமுன்னு எனக்கு நிச்சயம் தெரியும் ஆனா ஏன் அதை நான் நடத்தினேன் தெரியுமா? உனக்கு உள்ளே இருக்கிற திமிருக்கு பதில் சொல்லனும்னுதான்.ஒரு நடிகனா  நிச்சயமா நீ ஜெயிப்பே. நாளைக்கே நீ சினிமாவில் கூட பெரிய நடிகனா கூட வரலாம் எனக்கு நம்பிக்கை இருக்கு. ஆனா நீ இல்லாம  எதுவுமே நடக்காதுன்னு  நினைக்கிற உன்னோட இந்த நிமிஷ திமிருக்கு பதில் சொல்லனும்னுதான்  நான் தோல்வியை ஏத்துகிட்டேன். நான் ஜெயிச்சா மட்டும் போதாது நாடகமும் ஜெயிக்கனும்னு நீ நினைச்சிருக்க வேண்டாமா?
பிரகாஷ் இது சிம்பிளான விஷயம்.. நீ இருந்தா வாழ்க்கை ஒரு வேளை ரொம்ப நல்லாயிருக்கும்தான்.. ஆனா நீ இல்லேன்னாலும் வாழ்க்கை நிச்சயமா நடக்கும். யுகம் யுகமா இதுதான் இயற்கைன்னு சொல்லிட்டு எழுந்திட்டு 
போயிட்டே யிருந்தாரு என் புரபஸர்.

கழுமரத்தில ஏத்தினது மாதிரி  என் திமிரு அங்கே  அப்போ என் கண்ணுக்கு முன்னாலேயே செத்து போச்சி.  ஜென்மத்துக்கும் அந்த குரு நாதரை மறக்க மாட்டேன்.
****

இப்ப சொல்லுங்க நாம் வெற்றின்னு இறுமாப்பு கொள்ளும் விஷயம் சில சமயம் வெற்றியா இருக்காது. சில வருடங்களுக்கு பின்னால் பிரகாஷ் ராஜ் அதே காலேஜுக்கு நடிகரா, சீப்-கெஸ்ட்டா போயிருக்கார். அப்பவும்  அவர் இல்லாமத்தான் ஷேக்ஸ்பியர்  நாடகம் நடக்குது. பக்கத்தில் ஸ்கிர்ப்ட்டோட ரிடையர்டு ஆகற கட்டத்துல அதே புரபஸர். எப்பவோ கேட்காத மன்னிப்பையும் எப்பவோ சொல்ல வேண்டிய நன்றியையும் பிரகாஷ் ராஜ்  அந்த மேடையிலேயே அந்த புரபஸர் கிட்டே சொன்னாராம்.


*********

பிரகாஷ்ராஜ் நடிப்பில் தந்தை, மகளின் அற்புதமான நட்பை சொன்ன அபியும், நானும் படத்தை பலமுறை ரசித்து பார்த்திருக்கிறேன்.

Monday, 8 April 2013

புத்திசாலிங்க இப்படித்தான் படிப்பாங்க...!



சயின்ஸ் க்ளாஸ்
ஆசிரியை:  தண்ணியிலிருந்து ஏன் மின்சாரம் எடுக்கறாங்க?

ஸ்டூடண்ட்: (லூசு) டீச்சர்.. அப்படி எடுக்கலைன்னா நாம குளிக்கும்  போது ஷாக் அடிக்குமே...!

மேத்ஸ் க்ளாஸ்

securedownload3.gif


securedownload1.jpeg


 securedownload4.gif

Sunday, 7 April 2013

“மனசாட்சி..! “

 

“  மது.. என்னாச்சு… நேத்துலர்ந்து பார்க்கிறேன் ஒரு மாதிரி டல்லா இருக்கே.. நீ டூர் போயிட்டு வந்ததிலர்ந்தே கலகலப்பா இல்ல… “ மதுமிதாவின் அம்மா கேட்க,


“ அம்மா… நம்ம பாட்டி  உயிரோட இருந்திருந்தா..  நீ நல்லா பார்த்திட்டு இருப்பே இல்ல…?” 


அவள் கேள்வியில் ஒரு நிமிஷம் ஆடிப்போன  விஜயா….  “ இப்ப எதுக்கு சம்பந்தமில்லாம இதை கேட்கிற….”


“  அம்மா ஏதோ ஒரு ஃபிலீங்க்ஸ் அட்டாக்…. அதான் கேட்டேன்… என்னையும் , அப்பாவையும் இவ்வளவு நேசிக்கிற நீ நிச்சயம் இன்னோரு ஜீவனை வெறுக்க முடியாது….. “


“ ஏய்   நீ என்னமோ குழம்பி போயிருக்க… அப்பா ஏதாவது உன் கிட்ட மனசு வருத்தப் படற மாதிரி சொன்னாரா…?


“   நோ மா…  நாங்க திருச்சில மலைக் கோட்டை பார்த்துட்டு… ஒரு ஆர்ட்டிக்கிளுக்காக  அன்னை இல்லம் …ங்கிற முதியோர் இல்லத்துக்கு போனோம். அங்க இருந்த வயசான தாத்தா… பாட்டியை எல்லாம் பார்க்கிறப்ப ரொம்ப பாவமா இருந்துச்சி… சொந்தம் இருந்தும் கவனிக்க முடியாம  அனாதை ஆனவங்க.. அதிலயும் ஒரு பாட்டி கிருஷ்ணவேணின்னு…  நம்ம நேட்டிவ் ஊரைதான்மா சொன்னாங்க….  நீ என் பேத்தி போலன்னு ரொம்ப பாசமா பேசினாங்க…  அப்பா ஊராச்சே ஒரு வேளை அப்பாவை தெரியுமோன்னு பர்சில் வச்சிருந்த    நாம மூணு பேர் இருக்கிற  நம்ம போட்டோவில அப்பாவை காட்டினேன்…  தெரியலைன்னுட்டாங்க… அவங்களுக்கு யாருமே கிடையாதாம்…. பட் என்னமோ தெரியலை நான் கிளம்பிறப்ப அவங்க கண்ணீர் சிந்தியது என்னால மறக்க முடியலைம்மா… என் மொபைல்ல கூட அவங்க போட்டோ எடுத்து வந்திருக்கேன்….


அப்பாவிடம் காட்ட… அதிலிருந்த அம்மாவை பார்த்து அதிர்ந்து போனான் ராகவன்.


“ மது… நாம என்ன விதைக்கிறோமோ… அதைதான் அறுவடை பண்ணமுடியும்… பெத்தவங்களை அனாதையா விட்ட பிள்ளைங்களுக்கும்..  அந்த நிலமை ஒரு நாள் வரும்…    நாளை நீ கல்யாணம்  ஆகி போற இடத்துல இத உணர்ந்தாலே..  பெரியவங்களை மதிக்கிற நல்ல தலைமுறை வளரும்…. வருத்தப் படாதே    நீயும்.. நானும் இன்னொரு நாள் அவங்களை பார்த்துட்டு ஏதாவது உதவி செஞ்சிட்டு வரலாம்… போய் தூங்கு…”


“  அப்பான்னா… அப்பாதான்… உங்ளுக்கு எவ்வளவு நல்ல மனசு…. !”கொஞ்சலாக கை பிடித்து முத்தமிட்டு சென்றாள்.

           
“  பாவி… பெத்த பொண்ணு முன்னாடியே என்னை குற்றவாளியா நிக்க வச்சிட்டியே…  என் அம்மாவையே அவ அனாதைன்னு காட்டறப்ப… வேதனையில துடிச்சி போயிட்டேன்…   எங்கம்மா கூட இருந்தா தற்கொலை பண்ணிக்குவேன்னு மிரட்டி மிரட்டியே… தனியா கூட்டிட்டு வந்துட்ட…  எனக்கு வேதனை தரக் கூடாதுன்னு அம்மாவே…  இருக்கிற இடத்தை கூட சொல்லாம எங்கியோ.. போயிட்டா…..  இப்பக் கூட பாரு… உன்னை காட்டிக் குடுக்காம… அவளுக்கு யாருமில்லைன்னு பொய் சொல்லியிருக்கா…  நல்ல வேளை.. பாட்டி முகத்தை கூட மதுவுக்கு காட்டாமயே வளர்த்துட்ட…  இல்லைன்னா..  உன் வேஷம் கலைஞ்சி  இவ்வளவு மோசமானவளா நம்ம அம்மான்னு உன்னை வெறுத்து போயிருப்பா….. !”


குற்ற உணர்வு குறு குறுக்க… விஜயா உள்ளுக்குள் வருந்தி தூக்கம் வராமல்  புரண்டு கொண்டிருந்தாள் ….  “ மனசு எப்படி வேணா நடந்துகிட்டாலும்… என்னிக்காவது ஒரு   நாள்  தப்பா.. சரியான்னு கேட்க ஆரம்பிச்சுடும்… விஜயா….  இனி நாம நிம்மதியா தூங்கமுடியுமா….?”  

ராகவனின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திரும்பிகொண்ட விஜயாவின்  மனசாட்சி புரட்டி கொண்டே இருந்தது....


                                                            *********

Thursday, 4 April 2013

ஆட்டோகிராப்




ஆனா அப்ப அதான் ஸ்கூலு
யுவராணின்னு ஒரு டீச்சர்..
கவர்மெண்ட் ஸ்கூல்ல
ஃபேனா சுத்தறது.. ரெண்டு பசங்க
ஒருத்தன் வல பக்கம் இன்னொருத்தன்
இடப்பக்கம்.. அட்டைய வச்சி  வீசிகிட்டு..
கரண்ட் போற நாழியெல்லாம் டீச்சர் ஞாபகம்..

கன்னத்தை கிள்ளி
சிட்டி சார் சொல்வார்.. ஏ ஜில்லு..
 நீ பெரியவளாயி கல்யாணம் கட்டிகிட்டு
குழந்தை குட்டியோடு போகும் போது
வழியில பார்த்தா  கிழவன் கிடக்கிறான் போன்னு
வணக்கம் கூட வைக்க மாட்டாய்

விளையாட்டு வினையாச்சி
கண்ணாடி வளை துண்டில
கண்ணுகிட்ட கீறினா பூங்குழலி
சின்ன அடையாளம் அவளை
இன்னும் சொல்லிகிடக்கு


என்ன  திட்டினாலும் ஒட்டிகிட்டிருப்பா லதா..
எப்பவும் எண்ணெய் வழிஞ்ச முகத்தில
கூடவே வழியும் –அன்பு
ஹைஸ்கூல் முடிஞ்சி
ஊர் மாறி போனாள்.. போன ஊர் தெரியல..

டியுஷனில்..
நீயா நானான்னு-
விழுந்து விழுந்து படிப்பான் தாமு..
பேர் சொல்லும் போது
ஷா வராது அவனுக்கு சா என்பான்.

சொப்பு சோறாக்கி
கல்லூரி வரை ஒண்ணாவே திரிஞ்ச மாலு
தேசம் கடந்து..

பரீட்சையில்  நோட்ஸையே எடுத்து தந்த
அந்த ‘ஜொள்’ மாஸ்டர்..

காதலை நான் பார்க்கவில்லை
என்னை பார்த்த அந்த காதலிடம் சொன்னேன்..
காதல் என்சொல்லுக்கே -
முழங்கயித்துல தூக்கு போட்டுக்கொள்ளும் என் குடும்பம்..
மறுப்பது உன் உரிமை.. மறக்க சொல்வதல்ல
 நாகரீகமாய்  சென்ற அந்த’ ஜெண்டில்மேன்… ‘

 என்றாவது ஓர் நாள்
பயணங்களில் பாதைகளில்
பார்க்க நேரிடும்
முகவரி தெரியாத இந்தமுகங்களை-
உலகம் உருண்டை என்பது உண்மையானால்…!

Tuesday, 2 April 2013

உஸ்..வெய்யில் கண்ணை கட்டுதே...!

அறைக்குள் முடங்கி
கிடந்தாலும்
அம்மாவின்  வாசம்
சொன்னது.
வத்தலும், வடாமும்

காகத்தை  விரட்ட
கருங்குடை ஒன்று
மொட்டை மாடியில்
சிடு சிடுப்பாய் உட்கார்ந்து..!

சாயுங்காலத்திற்கு காத்திருக்காத
துரத்தலில் தேடுகிறேன்
சாலைகளில்
தொலைத்த மரங்களை..

நிழல்  தேசங்களுக்கு
அடைக்கலம் புகுகையில்
புறமுதுகிட்டு ஓடாத 
 சூரிய காந்தி பூக்ளின் பரிகாசம்..!