திருமண அரங்கில்....!
வாழ்த்த
வந்தவர்கள்
விடைபெற்றதும்..
இருக்கைகளில் கசங்கி
பாதங்களில்
நசுங்கி
வாசிக்க
படாமல்
இறைந்து
கிடந்தது
வாழ்த்துப்பா..!
அப்புறப்படுத்த
வந்த
துப்புறவு
காரி
முணு
முணுப்பு
எம்மாம்
குப்பை பாரு..?!
மொய்
கவர் மட்டும்
பலமாய்
யோசித்தது
தன்னை
மட்டும்
சேகரித்த
காரணம்
புரியாமல்..!