தூக்கம் தொலைப்பவன் இரண்டு ரகம்..
ஒன்று சீக்கு கண்டவன்
இரண்டு காதல் கொண்டவன்
அவன் இரண்டாவது ரகம்.
அவன் இரண்டாவது ரகம்.
தூங்காத இரவுகளில்
பூக்கள் உதிரும் ஓசையை
கேட்டுக்கொண்டிருந்தான்.
காதல் வந்தால் காதலிக்கு
கன்னம் சிவக்கும்!
காதல் கொண்டவனுக்கோ
கண்கள் சிவக்கும்.... !
அவளும் அறிவாள் அவனை
கனவுகளுக்காகவே
உறக்கம் கொண்டிருக்கிறாள்…
கனவின் அரற்றலில்
ஊர் அறியுமோ
ஊர் அறியுமோ
அச்சத்தில் பதறினாள்..
அவன் காட்சியைவிட்டு
போய்க்கொண்டிருந்தான்..
ஆனாலும்
இதயத்தில்-
இதயத்தில்-
நெருங்கி கொண்டிருந்தான்..!
அவர்கள் பேசிகொள்ளவில்லை
அவர்கள் பேசிகொள்ளவில்லை
காதல் அவர்களுக்குள்
பேசிக்கொண்டிருந்தது..!
ஓர் காவியபொழுதின்
கடற்கரையில்
அவனும், அவளும்…
அலையும், அலையும்மனமும்..
காதல் ஊடுபரிமாற்றம்
நடத்தி கொண்டிருக்கிறது..
பாலில் உறையிட்ட தயிராய்..!
அவன் முத்தமழை பொழிய
அவள் கன்ன குடைபிடிக்க..!