Saturday 8 June 2013

இனி எல்லாம் சுகமே..!








ஜெய்எனக்குதலை வலிக்கிற மாதிரி இருந்தது.. பர்மிஷன்ல வீட்டுக்கு வந்துட்டேன்.நீங்க பிக்-அப் பண்ண வர வேண்டாம்…”  

சுஜிபோனில்சொல்லவும் , “ சரி நான் நேரா வீட்டுக்கே வந்துடறேன்…”  போனை வைத்தான்.

அவனுக்கு தெரியும் தலைவலி எல்லாம் இருக்காது   

அவன் தம்பி மனைவிக்கு வளைகாப்பு வைத்திருப்பதாக அம்மா அழைத்திருந்தாள். நெருங்கிய சொந்தங்களுக்கு போகாமல் இருக்கவும் முடியவில்லை..போனாலும் அவள் மனம் சங்கடம்படும்படி எதாவது நடந்துவிடும்.

போனமுறை அப்படிதான் வீட்டிற்கு போயிருந்தபோது அவன் தங்கை குழந்தையை ஆசையாய் வாங்கி சாப்பாடு ஊட்டி கொண்டிருந்தாள் 

.அம்மாதங்கையைபின்பக்கம்அழைத்து, “    விமலா உனக்கு கொஞ்சமாச்சும் அறிவிருக்கா…? அவகிட்ட போய் குழந்தைக்கு ஊட்ட தந்திருக்கியே..கண் திருஷ்டி பொல்லாதது தெரியுமா…”

மா.. நம்ம அண்ணிதானே..!”

ஆமா என்ன இருந்தாலும் வாயும் வயிறும் வேற வேறடி.. நாலு வருஷம் ஆகியும் அவளுக்கு இன்னும் ஒண்ணும் இல்லை.   உனக்கு ஒரு வருஷத்திலயே பொம்மையாட்டம் அழகா குழந்தை பிறந்திடுச்சேன்னு பொறாமையா இருக்கும்….”

குழந்தைக்கு வாய்துடைக்க பின்பக்கம் வந்த சுஜிக்கு மாமியார் சொன்னது கேட்டதும் கண் கலங்கியது. கேட்காதது போல், “ விமலா இந்தாம்மா தூக்கம் போல..தொட்டில்ல போட்டுடு…”  

குழந்தையை கொடுத்துவிட்டு அறைக்குள் போய் மௌனமாய் கலங்கி கொண்டிருந்தாள்.

என்ன யாராவது எதாவது சொன்னாங்களா..?”

அதுக்குத்தான் நான்எங்கயும் வரலைன்னேன்.. இப்படி எல்லார் வாயிலயும் நிற்கறதைவிட நான் தனியா போயிடறேன்.. நீங்க வேற கல்யாணம் பண்ணிக்கங்க…”

கோபத்தில்அவள்கன்னத்தில்பளீரென்றுவைத்தவன்…” இதையே  திருப்பி திருப்பி சொல்லாதன்னு எத்தனை வாட்டி சொல்லியிருக்கேன்.

முகத்தைகைகளால்மூடிவிசும்பிகொண்டிருந்தாள்.

ஏய்..  சுஜி ஸாரிடா.. நான் மனுஷனா இருக்கனும்னு நினைக்கிறேன்..நீ திரும்ப திரும்ப கோபபடுத்தினா.. அம்மா படிக்காதவ எப்படியாவது சொல்லிட்டு போறா.. டாக்டரே சொல்லி ஆச்சிரெண்டு பேருக்கும் எந்த குறையுமில்லைன்னு எப்ப வேணா பொறந்துட்டு போகட்டுமேன்னு நம்பிக்கையாஇரும்மா..  அப்படியே இல்லைன்னாலும் எனக்கு கவலை இல்லை..போய் வேலையை பாரு..”

ஒவ்வொரு  முறையும் சமாதானம் படுத்துவதற்குள் போதும் போதும் என்றுஆகிவிடும்.

"என்னங்க வீட்ல நம்ம ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்த்துகிட்டு எத்தனை நாளைக்கு இப்படியேஒரு குழந்தைய தத்து எடுத்துக்கலாமா…?”

சமயம் வரும் போது யோசிக்கலாம்.. இப்ப இந்த பேச்சை விட்டுடேன்…”

வீட்டில் சின்ன பல்பு மட்டும் எரிந்து கொண்டிருந்தது. பக்கத்தில் மாமி வீட்டுக்கு போயிருப்பாள்.அந்த வீட்டிற்கு ஐந்து மாதம் முன்தான் புதிதாய் வந்திருந்தார்கள் வயதானதம்பதிகளான அவர்கள். அவர் பாக்கியம் ராமசாமி கதையில் வரும் அப்புசாமி தாத்தா போலிருப்பார்.. இருந்தாலும்பேண்ட்சட்டை போட்டுக் கொண்டு மாமியுடன்தான் எங்குபோனாலும் வலம் வருவார்.அவர்கள் அன்னின்யோனத்தை சிலர் பரிகாசமாகவும், சிலர் இருந்தால் இப்படி ஒற்றுமையா இருக்கனும் என்றும் சொல்வார்கள்.

விடுமுறைநாட்களில் அரைப்பொழுது இவர்களுக்கு அவர்கள் வீட்டில் கழியும்.மாமி சுறு சுறுப்பாய் மணக்க மணக்க வத்தகுழம்பு வைத்து சாப்பிடசொல்வாள்.

காலிங்பெல்அடித்ததும், “ அச்சச்சோ நேரம் போனதே தெரியலை அவர் வந்துட்டார் நான் வர்றேன் மாமி…” வந்தாள்.

என்னங்க  இன்னிக்கு மாமாவுக்கு அறுபத்தி ஐந்தாவது பிறந்த நாளாம்அவங்க பிள்ளைங்க மூணு பேரும் மாத்தி மாத்தி போன் பண்ணி விஷ் பண்ணாங்களாம்.. “ மாமா முகத்தில எவ்வளவு சந்தோஷம் தெரியுமா?”
மாமாவிற்கு பிள்ளைகள் மீது ரொம்பப்ரியம். அவர்கள் செய்த சின்ன வயசு சேட்டைகளை சொல்லி சொல்லி சிரிப்பார்.

  தயா இருக்கனே அவன் ரொம்ப குறும்புக்காரன்.. ஒருமுறை என்சட்டை பாக்கெட்ல ரப்பர்பல்லியை வச்சுட்டான்.. நானும் பார்க்காம ஆபிஸ் போய்..டைப்பிஸ்ட் பேனா கேட்டாள்னு பாக்கெட்லருந்து எடுக்க பேனாவோட பல்லியும் அவ மேல விழ அலறி அடிச்சிட்டு டேபிளை சுத்தி   ஓடினா..
  விச்சு இருக்கானே எது திங்க கொடுத்தாலும் அவனுக்கு மட்டும் அதிகமா கொடுக்கனும்னு நினைப்பான்.. வாழைப்பழம் கொடுத்தா கூட ஸ்கேல் வச்சுஅளந்து பார்ப்பான்னா பாரேன்…”

 பொழுதுபோவதேதெரியாது.

அன்று ஞாயிற்றுக் கிழமை காலை டிபனை முடித்து விட்டு பக்கத்து வீட்டிற்கு கிளம்பி விட்டார்கள்.
  
இப்பத்தான் நினைச்சுட்டே இருந்தேன்சுடசுட காபியை தந்தாள் மாமி.

ஏனோ நேத்திலர்ந்து மாமாவிற்கு ஜூரமாயிருக்குமாத்திரை கொடுத்தேன்.. கொஞ்சங்கூட குறையல.. கொஞ்சம் ஆட்டோக்காரருக்கு போன் பண்ணிடறியாப்பா.. ஆஸ்பிட்டலுக்கு போய் வந்துடறோம்..”

என்ன  மாமி இந்த ஒத்தாசைகூட நான் செய்யமாட்டேனா? காலையிலயே என்னை கூப்பிட்டிருக்கலாமில்ல… “ மெல்ல அனத்தி கொண்டிருந்த மாமாவிடம் சென்றான்.. தொட்டு பார்த்ததில் ஜுரம் அதிகமாகவே தெரிந்தது.

சுஜி  நீ மாமிக்கு துணையா இங்கயே பேசிட்டிரு.. நான் மாமாவை
ஆட்டோவில் கூட்டிட்டு போய் வந்துடறேன்..”

மருத்துவமனையில் டிரிப்ஸ் ஏத்த சொல்லிவிட்டார்கள்.ஹாஸ்பிட்டல் விட்டு திரும்ப வர இரவு எட்டாகிவிட்டது.

வீட்டிற்கு வந்ததும் சுஜி சுக்குகஷாயம் கொடுத்து மாத்திரைகளை தந்தாள்.மாமி எதுவும்சாப்பிட தோன்றாமல் சோகமாய் உட்கார்ந்திருந்தாள். இந்தஐந்து மாதத்தில் அவர்களை சோர்வாய் பார்ப்பது இதுதான் முதல் முறை.

மாமி சொல்றேன்னு  தப்பா நினைச்சுக்காதீங்க.. இன்னிக்கு லீவு நாளாயிருக்கவே இவர் இருந்தார்..இந்த வயசானகாலத்துல நீங்க தனியா இருக்கறதைவிட உங்க பிள்ளைங்க யார் கிட்டயாவது இருக்கலாமில்லையா..”
சில வினாடி அமைதியாக இருந்த மாமி, சுஜியின் கைகளை பிடித்து கொண்டு,” குழந்தே..இத்தன பாசமா இருக்கிற உங்ககிட்ட இனிமேயும் விளையாட்டா கூட பொய் சொல்ல தோணலை..எங்களுக்கு பிள்ளைங்கன்னு யாருமில்ல…”

திடுக்கிட்டஜெய்யும், சுஜியும் மாமாவை பார்த்தார்கள் நிஜமா என்று கேட்பது போல

ஆமாப்பா..மாமி சொல்றது நிஜம்தான்தயா..விச்சு எல்லாம் என் கற்பனை குழந்தைகள்இதோ இருக்காளே இவளை நான் காதலிச்சிதான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். எனக்கு அவளும் அவளுக்கு நானும் குழந்தையா இருக்கனும்னு ஆண்டவன் நினைச்சானோ என்னவோ எங்களுக்கு அந்த பாக்கியம் அமையலை .ஆனா அது குறையா நினைக்காம நாங்க சந்தோஷமாத்தான் வாழ்ந்தோம். இவளை அப்பவே மேற்கொண்டு படிக்க வச்சேன். டீச்சரா வேலை செஞ்சி அம்பது குழந்தைகளுக்கு தாயா..குருவா..முப்பது வருஷம் சர்வீஸ் பண்ணினா. இத்தனை நாளா எங்களை ஒதுக்கியே வச்சிருந்த சொந்தம்லாம்.. பணம் சேர்ந்ததும் எங்க கூட ஒட்ட பார்த்தாங்கஇப்ப வயசாயிட்டது இல்ல..போயிட்டா சொத்தெல்லாம் அனுபவிக்கலாம்னு எல்லாரும் அவங்க கிட்டவந்து இருக்க சொல்லி கூப்பிட்டாங்க.. நாந்தான் அவங்க முகத்தில விழிக்ககூடாதுன்னு வீடு நிலம்னு எல்லாத்தையும் வித்துட்டு ஒரு எழுபது லட்சம்வரைபேங்கில் போட்டுட்டு.. இப்படி புதுசா ஒரு இடத்துக்குவந்துட்டோம்..

இன்னிக்கு  கொஞ்சம் படுத்த பிறகுதான் லேசா மனசில கலக்கமா இருக்கு..எங்களால் முடியாதப்ப..எங்களை ஒருஹோம்ல சேர்த்து விட்டுட்டா போதும்..என் பணமெல்லாம் எங்களுக்கு பிறகு அனாதை ஆசிரமத்திற்கு கொடுக்கிறதா ஏற்கனவே ஏற்பாடு பண்ணிட்டிருக்கேன்…”   தழு தழுத்து சொல்லிகொண்டிருந்தார்மாமா.

என்ன சொல்வது இந்த ஆதர்ச தம்பதிகளை?“ மாமா.. மனசை போட்டு வருத்திக்காம..இத்தனா நாளா இருந்த மாதிரியே இருங்க. நாங்க இருக்கோம்ல..நல்லா ரெஸ்ட் எடுங்க..மாமி மாமாவுக்கு நல்லாகறவரை நீங்க கிட்டருந்துகவனிச்சுக்கங்கரெண்டு நாளைக்கு சுஜியேசாப்பாடு தந்துடுவா…”கிளம்பினார்கள். 

இரவு வெகு நேரம் இருவருக்கும் தூக்கம் வரவில்லை.“ என்னங்க.. நாளைக்கு நமக்கும் வயசாயிட்டா யாருமில்லாம தவிப்போமா..”?

அசடு சும்மாகற்பனை பண்ணிக்காத.. ரொம்ப நாளா நீ கேட்டிட்டிருந்த இல்லதத்து எடுக்கலாம்னு.. இப்ப நான் முடிவு பண்ணிட்டேன்.. ஆனா உனக்கு சம்மதமான்னு சொல்லுஎன்று விஷயத்தை சொன்னான்.

மறுநாள் அலுவலகம் முடிந்ததும் மாமி வீட்டிற்கு சென்றவர்கள்.. “ மாமா நாங்க தத்து எடுக்கலாம்னு முடிவு பண்ணிட்டோம்.. ஆனா குழந்தையை இல்லகுழந்த மனசா இருக்கிற உங்க ரெண்டு பேரையும்..உங்க சொத்தெல்லாம் உங்க விருப்படியே ஆசிரமத்துக்கு தந்துட்டு எங்க வீட்டுக்கு வந்துடுங்க..நாங்க வர்றவரைக்கும் இருண்டு கிடக்கிற வீட்டை விளக்கேத்திவச்சி எங்களுக்காக காத்திருந்தா போதும்.

மற்றவர்களுக்கு பாரமாக இருக்க விருப்பமில்லை என்று மறுத்தவர்களை அன்பால் கட்டிப் போட்டுஅழைத்து வந்துவிட்டார்கள்.

மாமா காலையில் செய்தி தாளை படித்து விட்டு காரசாரமாய் விவாதம் செய்வதும், மாமி சுஜிக்கு சமையலில் ஒத்தாசை செய்வதும்..அந்த வீட்டில்இன்னும் இருவரின் பேச்சு சத்தம் கூடியதில் கல கலப்பாக இருந்தது.
           
 ஒரு மாதம் கழித்து ஒரு நாள் மாலை சுஜி போன் செய்தாள், “ என்னங்க நான் பர்மிஷன்ல வீட்டுக்கு வந்துட்டேன்..  எனக்காக வரவேண்டாம்..”என்றாள்.

மறுபடியும் இவளுக்கு மனவருத்தம் வந்து விட்டிருக்கிறது.. அதுதான் வீட்டுக்கு போய்விட்டிருப்பாள் என்று மாலை அலுவலகம்  முடிந்து வீட்டிற்கு வந்ததும்,

சுஜி எங்க.. எதுக்கு முன்னாடியே வந்துட்டா..?

நாங்க ஆஸ்பிட்டலுக்கு போயிருந்தோம் அதனாலதான்…” என்றாள் மாமி.

காலையில நல்லாத்தானே இருந்தா.. பதட்ட பட்டவனை
இரு.. முதல்ல இதை சாப்பிட்டு அப்புறம் பேசுநாங்க தாத்தா, பாட்டியாகிற பாக்கியம் கிடைச்சிருக்கு…”  மாமி கேசரியைநீட்டினாள்.

உங்களுக்கு ஸர்ப்பரைசா இருக்கட்டுமேன்னுதான் முன்னாடியே கூப்பிடலை…” சுஜி முகம் சிவந்தாள்.

***********************