பிரமாதமாக சமையலில் அசத்தும் ஆண்கள், பெண்களே உங்கள் திறமையை (வேலூர்) கோட்டையில்
கொடி கட்ட செய்யவே இந்த அரிய வாய்ப்பு...!
சமையல் மன்னர்கள், மன்னிகள் யார் வேண்டுமானாலும்
கலந்து கொள்ளலாம்...
போட்டி தேதி: 31-10-2013
போட்டிக்கான வகைகள்
கார வகைகள்
முறுக்கு
சீடை
மிக்ஸர்
இனிப்பு வகைகள்
அதிரசம்
லட்டு
பாதாம் கேக்
இந்த
வகைகளை செய்முறை எழுதி ஒவ்வொரு ரெசிப்பிக்களிலும் 3 கிலோ வீதம் செய்து கொண்டு வர வேண்டும்.
உள்ளூர் வாசிகள் நேரிலும், வெளியூர், வெளி நாட்டு வாசிகள் கொரியர் மற்றும் விமான சேவையில்
அனுப்பி வைக்கலாம்.
உள்ளூர் போட்டியாளர்கள் கலந்து கொள்ள வேண்டிய இடம்
இடம்: வேலூர் கோட்டை மைதானம் ,
தேதி: 31-10-2013 நேரம்: காலை-10
மணி.
நடுவர்கள் :
கார வகைகளுக்கு – செப் தாமு ( ஆனா அவர் பிஸியாயிட்டு
வர முடியாம போனால் ... அவசர கால நடுவராக எங்க தாத்தா..!)
இனிப்பு வகைகளுக்கு- மல்லிகா பத்ரினாத்(
இவரும் பிஸியாயிட்டு வர முடியாம போனால் .. அவசர கால நடுவராக எங்க பாட்டி..!)
..............................................
“ ப்பா...
அம்மா ஏன் அரைமணி நேரமா வானத்தை வெறிச்சு பார்த்துக்கிட்டிருக்காங்க...?”
“ சிம்பாலிக்கா யோசிக்கிறேன்னு ஸீன் போடறாங்க...”
“ ம்மா... ப்பா சொல்றது நெஜமா? அப்படி என்ன யோசிக்கிறிங்க?”
“அடடா யோசிக்கவே விடமாட்டிங்களே
... உங்க தொல்லை தாங்க முடியலைன்னுதானே தனியா மொட்டை மாடியில வந்து உட்கார்ந்திட்டிருக்கேன்..
போச்சு... போச்சு நல்ல ஐடியா கட்- ஆகி போச்சு....”
“ ...........”
“ என்னங்க.. போன வருஷம் தீபாவளி ஞாபகமிருக்கா...?
“ம்... அத மறக்க முடியுமா... அம்மாவும், பொண்ணும்
கடை கடையா ஏறி இறங்கி டஜன் கணக்கா துணி எடுத்துக்கிட்டு கடைசில எனக்கு கர்ச்சீப் மட்டும்
வாங்கி தந்தீங்களே அதுவா?”
“ம்... ம்... திரும்ப திரும்ப அதையே சொல்லிக்கிட்டிருப்பிங்களே... நாங்க அழகா(?) இருந்தா உங்களுக்குக்குதானே பெருமை? உங்களுக்கு(ஆண்களுக்கு) என்ன போட்டாலும் அப்படியேத்தான்
(இ.து.கொ...மாதிரி) இருக்க போறிங்க...? அதுக்கெதுக்கு புதுத்துணியெல்லாம்? சரி அதை
விடுங்க. போன தீபாவளியப்ப இங்க அக்கம், பக்கம், சொந்தக்காரங்கன்னு எல்லாரும் தீபாவளி
பலகாரங்கள் கொடுத்தாங்க இல்ல...?
“ ஆமா.. எக்கச்சக்க கலெக்க்ஷன்.. நாம தின்னது போக ஒரு வாரம் கழிச்சி எக்ஸிபிஷன்ல ஸ்டால் போட்டு வித்துட்டோமே
அதை சொல்றியா..?
“ ச்சீ... சத்தம் போடாதீங்க யாருக்காவது கேட்டுர
போவுது... ! நமக்கு பலகாரங்கள் தர்றவங்களுக்கு பதிலுக்கு நாம எதாவது தர வேணாமா...?”
“ அதுக்கென்ன பண்றது
உனக்கு கொழம்பு, ரசமே ஒழுங்கா வைக்க தெரியாது...
கடையில் வாங்கி குடுத்திடலாமா?...”
“ ஆமா கடையில் வாங்கி கொடுத்தா கட்டுபடியாகுமா? நமக்குதான்
ஒரு கூட்டமே இருக்கே... அதான் ஒரு நல்ல ஐடியாவா பண்ணேன்... இந்த ப்ளாக்குல கவிதை போட்டின்னு,
கதை போட்டின்னு யாராவது வைச்சுட்டாங்கன்னா...
எக்கச்சக்கமா எழுதி குவிச்சிடாறாங்க.. அது போல நாமளும் பலகார போட்டின்னு வச்சா
என்னன்னு யோசிச்சிட்டிருந்தேன்... போட்டி பலகாரத்தை எல்லாம் நாம சுட்டுகிட்டு போய்
நாம சுட்டதா சொல்லி அக்கம் பக்கம் குடுத்திரலாமான்னு யோசனை பண்ணிட்டிருந்தேன்... அதுக்குள்ள
நீங்க வந்து ‘கட்’ பண்ணிட்டிங்க...”
“ சூப்பர்
ஐடியா டியர்... அதுக்கென்ன மறுபடியும் ‘ஷாட்டுக்கு’.. போ...”
“அப்ப போட்டியில் கலந்துகிறவங்களுக்கு எதாவது பரிசு
கொடுக்கனுமில்ல...”
“ மம்மி.. அதான் உங்க கல்யாணத்துக்கு கிப்ட்டா வந்ததுன்னு
ஜூஸ் செட், காபி செட் ன்னு டப்பா டப்பாவா மூட்டை கட்டி அட்டத்து மேல போட்டு வச்சிருக்கிங்களே...அதை ஜிகினா பேப்பர் ஒட்டி குடுத்திடலாமா..?”
“ ம்.. என் அறிவுக்கேத்த கொழுந்து... பின்னால என்
பேரை காப்பாத்திடுவே செல்லம்...”
.....................
சரி... சரி மறக்காம எல்லோரும் 31-10-2013 அன்று மேற்கண்ட
பலகாரங்களை ஒவ்வொரு வகையிலும் 3 கிலோ அனுப்பி வச்சிடுங்க...!
ஹா... ஹா..ஹாஹ்... ஹா...! ஜெயிக்க போவது யாரு...?