Thursday 17 May 2012

என் பக்கம்

அன்புத் தொல்லை வேண்டாமே..


என் அக்கா , மாமா அவர்களுடைய மகன் திருமணத்திற்காக உறவினர்கள், நண்பர்கள் இல்லங்களுக்கு சென்று அழைப்பிதழ் தந்து விட்டு வந்தார்கள். என் அக்கா வந்ததும் டயர்டாக இருந்தார். ஒவ்வொரு வீட்டிலும் காபி , டீ என்று வலுக்கட்டாயமாய் தந்துவிடுகிறார்கள். மறுத்தால் கோபித்து கொண்டு விடுகிறார்கள்.ஓரே நாளில் முப்பது வீட்டில் காபி, டீ , எண்ணைய் பலகாரம் என்று சொல்லி வாந்தி எடுத்தார். உண்மைதான். அழைப்பிதழ் தர வருபவர்களிடம் அவர்கள் விரும்பினால் தவிர கட்டாயப்படுத்தி எதுவும் தராதீர்கள். அவர்கள் பல இடங்களுக்கும் செல்ல வேண்டியிருக்கும். உங்கள் அன்புத்தொல்லை அவர்கள் உடலுக்கு தொல்லையாகி அவஸ்தைக்குள்ளாக்க வேண்டாம்.
( 31-12-2011 தினமலர்- பெண்கள் மலர் எங்கள் பக்கத்தில்)