Friday, 31 August 2012

சிறுகதை
     


 பள்ளிக்கூடம்

                                                                                                
“ மேகா.. எழந்திரு டியர்.. இன்னியிலர்ந்துதான் நீ க்ளாஸ் ஜாய்ன் பண்ணப்போற.. தூங்கிட்டே இருந்தா எப்படி?
சந்துரு நான் போய்த்தான் ஆகனுமா? சிணுங்கினாள்.
“எவ்வளவோ படிச்சிட்ட..  இது பத்து நாள் கோர்ஸ்தானே.. உனக்காகவும் நம்ம எதிர்காலத்துக்குகாகவும்தான்மா…
“ க்கும்.. சலித்து கொண்டே ரெடியாகி கிளம்பும் போது அம்மாவின் போன், “ மேகி ம்மா.. நேத்து மாப்பிள்ளை விஷயத்தை சொன்னார்..  நானும் அப்பாவும் சிரிச்சுண்டோம்.. தானா தெரிஞ்சிக்க வேண்டியதை க்ளாஸ் போய் கத்துக்க போறத நினைச்சி. எனி வே ஆல் தி பெஸ்ட்,,! “
மேகா இருபத்திரெண்டு வயது அழகுப் பதுமை. எம்.சி.ஏ முடித்து பிரபல ஸாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை. அம்மா வீட்டிலிருந்த போது வீட்டு வேலைகளில் எதையும் தொட்டு கூட பார்க்க மாட்டாள். மஞ்சள் தூளுக்கும், மிளகாய் தூளுக்கும் கூட வித்தியாசம் தெரியாது.
 அம்மா தலைப்பாடாய் அடித்து கொள்வாள்,  “  எனக்கு செய்யலைன்னா பரவாயில்லை.. நாளைக்கு உனக்கு வர்ற புருஷன், குழந்தைகளுக்காவது சமைச்சி போட தெரியனுமில்ல..”
“ போம்மா..  உப்பு, புளின்னு அடுப்பங்கரையிலேயே அடைஞ்சி கிடக்க நான் என்ன பத்தாங்க்ளாஸா? கை நிறைய சம்பாதிக்கிறேன்… வேலைக்காரி வெச்சுப்பேன். “

“ ஆமாமா.. வேலைக்காரி  இருபத்தி  நாலு மணி  நேரமும் கூடவே இருப்பா வா…”  வீட்டு வேலைக்குதான்  ஆள் வருவா…  நம்ம வீட்டு கிச்சனை   நாமதானே பார்க்கனும்”
மாப்பிள்ளை சந்துருவும் ஸாப்ட்வேர் எஞ்சினியர், பெண் பார்க்க வந்த போதே சொல்லிவிட்டாள் அவளுக்கு சமைக்க தெரியாது என்பதை. ஹோட்டலில் சாப்பிட்டே பழகிவிட்ட அவன்  அது பற்றி கவலை படவில்லை. கவலை இப்போது மேகாவிற்குதான். வாய்க்கு ருசியாய்.. சத்தாய் அம்மாவின் வீட்டு சாப்பாடே சாப்பிட்டு பழகியவளுக்கு இப்போது திருமணமாகி  தனியாக போய் இரண்டு மாதமாய் கேண்டினில் சாப்பிட்டது வயிறு பிரச்சினை. டாக்டர் இனி வெளியில் எங்கும் சாப்பிடக்கூடாதுன்னு கண்டிஷன் போட்டு விடவும்  சமைக்க  கற்றுக் கொள்ள ‘ கேட்டரிங்’ க்ளாஸ்  போகிறாள்.
சிறுகதை:
                         “ ஐய்.. என் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா….! “
    
மதனுக்கு நாளைய பொழுதை நினைக்கும் போதே சிலிர்த்தது. மனசுக்குள் குதூகலம் எட்டிபார்த்தது, ‘ம்..எத்தனை நாள் இதற்காக காத்திருந்தேன்? இப்படி ஒரு சந்தர்ப்பம் வரும்போது மிஸ் பண்ணாம அனுபவிக்கனும்’  இதோடு விட்டுட்டா எப்ப கிடைக்குமோ?
திருமணத்திற்கு முன் எவ்வளவு ஜாலியாக இருந்தேன், இந்த கல்யாணத்துக்கப்புறம் எல்லாம் போச்சி. எமகாதகி விட மாட்டா. காட்டு கத்தலா கத்தி என் மானத்தை வாங்கிடுவா. பிள்ளைங்க ரெண்டு பெத்தாச்சு அதுங்க உங்களை பார்த்து கெட்டழியனுமான்னு.. ரகளை பண்ணிடுவா.
            பாரதியாம்.. பாரதி மீசை வைக்காத பாரதின்னு நினைப்பு. என்னா ரூல்ஸ் பேசுவா. அவ அம்மாவுக்கு உடம்பு சரியில்லையாம். நான் மட்டும் பசங்களோடு போய் பார்த்துட்டு வந்துடறேன்னு ஒரு வழியா கிளம்பினா. நல்ல வேளை என்னை கம்பெல் பண்ணி கூப்பிடலை ஒருவேளை அழகான ஷாலு கூட காரணமாயிருக்கலாம். அதான் என் மச்சினி .   நிம்மதியா போச்சு.. நான் எதிர் பார்த்த சந்தர்ப்பத்தை அவளே ஏற்படுத்தி கொடுத்துட்டா.
யாரும் வந்து காரியத்தை கெடுத்து விடக் கூடாதுன்னு மனசுக்குள்ள பிளான் போட்டேன்.    பேப்பர்காரனுக்கு, பால்காரனுக்கு போன் பண்ணி நாளை வர வேண்டாம் என்றேன்.  நாளை விடியும் போது நான் மட்டும் இருப்பது தெரிந்து பக்கத்து வீட்டு ரிடையர்டு கேஸ்.. ராகவன் ஸார் வந்து தொலைத்தால்.. லொட லொடன்னு பேசிகிட்டு   நான் ஏங்கிகிட்டிருக்க விஷயம் அதோ கதிதான். வெளி பக்கமாக யாருமில்லாதது மாதிரி பூட்டு போட்டேன்.  கேட் வழியே பார்த்தால் என் செருப்பு காட்டி கொடுத்து விடுமோ என்று சாமர்த்தியமாக  ஒரு ஓரமாய் பதுக்கினேன். எல்லா ஜன்னலையும் சாத்திவிட்டு ஸ்கீரின் போட்டேன். வெளிச்சம் வேண்டாம்னுதான். போர்வையை இழுத்து போர்த்திக் கொண்டேன் ‘அப்பாடா இப்பதான் நிம்மதியா ஆச்சு  நாளை ஒரு ஞாயித்துக்கிழமையாவது காலையில பதினொரு மணி வரைக்கும் தூங்க போகிறேன்’.பாரதி இருந்தா விடமாட்டா.. படிக்கிற பிள்ளைங்க உங்களை பார்த்து கத்துக்காதான்னு  கத்தி அலாரத்தை விட ஆறு மடங்கா அலறுவா.  “ நாளைக்கு எப்ப வேணா எழுந்திருப்பேன் எப்ப வேணா சாப்பிடுவேன்டி பாரதி..” ஆஹ்..ஆஹ்ஹா வென்று ஒரு நாள் பேச்சுலரா மனசுக்குள் கொக்கரித்தேன்.
“  நாட்டு நடப்போய்….”


“ நம்ம ராமசாமி பெரிய இடத்திலதான்பா பெண் எடுத்திருக்கான்… கல்யாண பந்தியில இலையில் எல்லாருக்கும் ஒரு வாழைப் பழம் வச்சிருந்தாங்கப்பா..”
“மாமி கிராண்டா இல்ல கொலு வச்சிருக்கா.. வர்றவாளுக்கு  வெத்தலை பாக்கு தாம்பூலத்துல ஜதை வாழைப்பழமில்ல சேர்த்து தர்றா…”
“சீனு அம்மாம் பணத்தை வச்சிட்டு ரொம்ப கஞ்ச பிசினாறிப்பா… பத்திரிக்கை வைக்கிறப்ப வெத்திலைப் பாக்கோட  ரெண்டு சாத்துக்கொடில்ல எடுத்துட்டு வந்தான்..?”
வாழைப்பழத்துக்கு வந்த வாழ்வு பாருங்கள். பங்க் கடை , பிளாட்பாரம்.. பெரிய கடைகள்னு சீப்பு சீப்பா கடை பரப்பிகிட்ட இருந்த வாழைப்பழம் இப்ப சீப் இல்ல…’ chief ‘ ஆ  இல்ல ஆயிடுச்சு.  வேலையில்லாம உட்கார்ந்திருக்கவனிலிருந்து  சாப்பிட நேரமில்லாம சுத்திக்கிட்டிருக்கவன் வரை பசிக்கிற வயத்துக்கு சமாதானம் சொல்லிகிட்டிருந்தது ரெண்டோ  நாலோ வாழைப்பழத்தை புட்டு போட்டு சிங்கிள் டீயை ஊத்திகிட்டுதான்.!   இப்ப   அதவிட ‘சரவண பவன்’ ல ரெண்டு இட்லி சாப்பிடலாம்னு புறப்பட்டுட்டாங்க. பின்ன.. ஒரு பழமே அஞ்சு ரூபா இல்ல ஆயிடுச்சி? 

அது சரி உற்பத்தி குறைஞ்சதால இந்த கிடு கிடு விலைங்கிறாங்க.  

மஞ்ச பையோடு வாழப்பழ தார் எடுத்துகிட்டு கிராமத்திலருந்து   நம்ம பார்க்க வர்ற பட்டிக்காட்டு  சித்தப்பு, பெரியப்பு எல்லாம் இப்ப ஹீரோ கணக்கா ஆயிட்டாங்க. ஒஸ்தின்னு வாலாட்டிகிட்டிருந்த ஆப்பிள் பக்கத்தில இப்ப‘நாங்களூந்தேன்’ னு வாழை பழமும் உட்கார்ந்துக்கிட்டதால   அவுகளுக்கு  இந்த பில்- டப்பு..!
 
தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டா காலையில சிக்கல் இல்லன்னு மருத்துவம் சொல்லுது. அதெல்லாம் வாணாம் தினம் ஒரு வாழை பழ விலையை கேட்டாவே போதும்..  சிக்கல் இல்லாம கலக்கிடும்னு பொருளாதாரம் சொல்லுதுங்க. 

Saturday, 25 August 2012

 

நினைத்ததை பரிமாறிக் கொள்வோம்


எழுத்துப் பிழை வார்த்தையின் அர்த்தத்தையே மாற்றி விடுகிறது.  டைப் பண்ணும் போது. சில சமயம் எதோ ஒரு எழுத்து மிஸ் ஆகிவிடும். மெயில் அனுப்பிவிட்ட பிறகுதான் என் கண்ணில் படும். நான் இதற்கு முன் ஒரு  மெயிலில் விஷயத்தை என்று டைப் பண்ணும்போது ‘ ’ வை மிஸ் பண்ணிட்டிருக்கேன். விஷயம் விஷமாகி விட்டது. எதிர் வீடு என்பதற்கு எதிரி வீடு என்றும் ஒரு சமயம். அப்பப்பா அர்த்தம் ஏனப்பா இப்படி மாறுகிறது.எழுத்தை மிஸ் பண்ணும் போதுதான் வார்த்தை, அர்த்தம் மாறிவிடுவதில்லை. குறில்,   நெடில், புள்ளி ஒவ்வொன்றிலும் கவனமாக இருந்துதான் ஆக வேண்டியிருக்கு.  வருக என்பதில் ‘ வ ‘  விற்கு கால் போட்டுவிட்டால் அது யாரையாவது வார சொல்லி காலை வாரி விட்டிரும்.  ( தப்பு பண்ணிட்டு இதுல துணைப்பாடம் வேறவா..என்று என் மனசு முணு முணுக்கிறது)
பேசுவதை விட எழுத்திற்கு ரொம்ப பவர்புல்ங்க… பேசும் போது ஒரு நல்ல சிந்தனையை சொல்லனும்னா கூட பேச்சாளர் சுவாரஸ்யமா மக்களை தம் பக்கம் இழுத்தால் தான் அது மக்கள் கிட்ட போய் சேரும். இதை  இளைய ராஜா கூட அவருடைய அனுபவங்கள்ல சொல்லியிருக்காரு. ஒரு முறை அவர் அண்ணன் பாவலர் வரதராஜனுக்கு பதில் இளையராஜாவும், அவருடைய மற்றொரு அண்ணன் பாஸ்கர் அவர்களும் ஒரு மேடையில்  தேர்தல் பேச்சுக்காக பாடல் பாடி பேச  போயிருக்கிறார்கள். பாவலர் வணக்கம் என்று சொல்லும் போது கிடைக்கும் கை தட்டல் கூட  நிகழ்ச்சி முடிந்து கடைசி வரை  இவர்களுக்கு கிடைக்கவில்லையாம். ஆனா எழுத்து  நாம எப்படி எழுதுகிறோமோ அப்படி வசியம் பண்ணிடுங்க. கோபம், வீரம், தத்துவம்.. அன்பு.. நம்பிக்கை … நகைச்சுவை  இப்படி பேனாவால எதை வடிச்சாலும் படிக்கறவங்களுக்கு அந்த உணர்வு வருங்க. அதனாலதான் எழுத்துக்கு ரொம்ப பவர்புல் !  நகைச் சுவையை விரும்பாதவங்க யாருமே இருக்கமாட்டாங்க. இந்த சுவை  இல்லாத வாழ்க்கை சப்னு சுவாரஸ்யம் இல்லாம இருக்கும். ஒரு    நாளைக்கு குறைந்த பட்சம் ரெண்டு முறையாவது  சிரிக்கனும். சிரிக்க வைக்கனும். அது கூட இல்லாத சீரியஸ் ஆள் .. ம்ஹும்.. ரொம்ப கஷ்டம் அந்த இடம் சிறை மாதிரிதான் இருக்கும்.
தென் கட்சி கோ.சுவாமி நாதன்  விஷயத்தை சொல்லிட்டு கடைசியில் சிரிக்கிற மாதிரி பண்ணிடுவாரு. அவர் சொன்னதில நான் ரசிச்ச ஓன்று:-
ஒரு எழுத்தாளர் தான்  எழுதி வச்சிட்டிருந்ததை எல்லாம் கொயர் கொயர் பேப்பரா அடுக்கி வச்சிகிட்டு கவலையா இருந்தாராம். அப்ப ஒரு ஆள்  சந்திக்க வந்திருக்கான். இவரை பார்த்து ஏன் இப்படி உம் முனு இருக்கிங்க? ன்னு கேட்டிருக்கான். அதுக்கு எழுத்தாளர் நான் எழுதரதை இந்த ஊடகங்கள் புரிஞ்சுக்கறதேயில்லை. இந்த பதிப்பாளர்களுக்கு   நல்ல எழுத்தை போட தெரியவில்லை.அப்படிதான் ஒரு புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளர் வெறுத்து போய் தான் எழுதினதை எல்லாம் பழைய பேப்பர்க்காரனுக்கு போட்டு விட்டாராம். அதுல ஒரு பேப்பர் மளிகை கடையில  பொட்டலம் மடிக்கப்பட்டு  ஒரு ஆள் கையில் கிடைச்சிருக்கு.  அவர் அதுல இருந்த எழுத்தை படிச்சி.. இத்தனை அருமையா எழுதர யார் அவர்…? னு மளிகை கடைக்காரரை விசாரிக்க அவர் பழைய பேப்பர்க் காரரை கை காட்ட மேட்டர் முடிந்தது. மிச்சமிருந்த பேப்பரை எல்லாம் வாங்கி புத்தகம் போட்டாராம். அதற்கப்புறம் அந்த ஆங்கில எழுத்தாளர் ஒஹோன்னு போயிட்டாருங்க என்றார். உடனே சந்திக்க வந்த ஆள் ,  “ கவலைப் படாதீங்க நீங்களும் ஓஹோன்னு ஆயிடுவிங்க அதுக்குதான் நான் இப்ப வந்திருக்கேன் என்றாராம். உடனே எழுத்தாளர் முகம் மலர்த்து , “ அப்படியா நீங்க எந்த பதிப்பகத்துலர்ந்து வந்திருக்கிங்க? “ என்றார். அதற்கு வந்தவர், “  நான் பதிப்பகத்திலர்ந்து வரலை… பழைய பேப்பர் கடையிலிருந்து வந்திருக்கேன்..!”  என்றார்.
அப்படித்தான் ஒரு நாள் கீரை கிள்ளிகிட்டிருந்தேன்,  நேரமாயிச்சுன்னு என் மகளை கூப்பிட்டு கொஞ்சம் கிள்ளிறியாம்மா என்றேன்… அதற்கு அவள் கொஞ்சம் என்ன நிறையவே கிள்றேனே என்று ‘ சுருக் ‘ கென்று  என் கையை கிள்ளிட்டு ஓடிட்டா.   பசங்க விவரமானவங்க   நாமும் முதல்லயே விவரமா சொல்லிட்டாதான் நல்லது.

ஒரு விஷயத்திற்கு வருவோம்  நிறைய பேர் கிட்ட திறமை இருக்கும், ஆனா சில பேர் உயரத்துக்கு போறாங்க… சில பேர் நின்ன இடத்துலயே இருப்பாங்க. இதுல யாரை யார் இடம் மாற வைக்குதுன்னு பார்த்தாக்கா “ உழைப்புதான்..!”  தோல்வியே வந்தாலும், மனசு உடையாத உழைப்பு இருக்க வேண்டும். உலகத்தில சிறந்த நறுமணம் வியர்வையின் வாசம் னு சொல்வாங்க. கஷ்டபட்டு உயரத்துக்கு போனவங்களை பார்த்தா அவங்க அனுபவங்கள்  பிரமிப்பா இருக்கும். ஏன்னா அந்த வலிகள் நமக்கு தெரியாதது. ஒரு வேளை உணவிற்கு கூட தவித்து, வானமே கூரையாக வாழ்ந்து வானத்தை எட்டி பிடிக்கும்    அளவு   உயர்ந்தவர்கள்  இருக்கிறார்கள்.  இப்படி   ஒரு அனுபங்கள் நமக்கு கிடைக்கவில்லையே என்று கூட ஏக்கப்பட்டிருக்கிறேன். கஷ்டபட்டு முன்னுக்கு வந்தவர்கள் என் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறார்கள்.  பசி இருந்தால்தான்  தெரியும் ருசி.   நாம் கடவுளிடம் வேண்டுவது,’ உழைக்க தெம்பு’… என்பதாக இருக்கட்டும்.
பேராசைக்கும், வெற்றிக்கும் வித்தியாசம் இருக்கிறது. வெற்றி நாம் ஒன்றின் மேல் ஆசைப் பட்டு அதற்காக உழைத்ததால் கிடைத்த பரிசு! பேராசை குறுகிய காலத்தில் தகுதி இல்லாமலே  தேடிக் கொள்ளும் பொருள். ஸோ.. ஆசைப்படுவோம். ஏணியில் ஏறுவதற்கு முன் நடை வண்டி தள்ளி பழகுவதையும் குறைவாக  நினைக்காமல்.

Saturday, 18 August 2012

கவிதை ( அனாதையான முதியவர்கள் )



"  அனுபவ பொக்கிஷம் "

கடந்து வந்த
பாதைகளின்
' முக'வரிகள்...
பிரயாணித்த
தடங்களின்
அனுபவங்கள்..
ஓடியாடி உழைத்த
நாட்களை
தளர்ந்த நடையிலும்
தளராமல் அசை போடும்
முதுமை..!
பழையன கழிதலும்
புதியன புகுதலும்
ஜட பொருள்களுக்குதானே...?
அனுபவ பெட்டகமான
முதியோர்களை
போற்றி பாதுகாப்பது விட்டு
வீதியில் ஏன் தொலைத்துவிடுகிறீர்..?

காதல் தத்துவமுங்கோ

ஒரு மனிதனுக்குள் புது உணர்வா காதல் நுழைஞ்சதாம். மனுஷனுக்குள்ள இருக்கிற உணர்வுகளோட ஒன்றிப்போகலாம்னு சந்தோஷத்துகிட்ட போய் கை கொடுத்துச்சாம், ஆனா சந்தோஷமோ “வேண்டாம் உன் உறவு நான் மகிழ்ச்சியா இருக்கிறது உனக்கு பிடிக்கலையா.. உன்னை ஏத்துகிட்டா என் சந்தோஷமே போயிடும் ஆளைவிடு” ன்னு வேகமா நழுவிக்குச்சாம். சரின்னுட்டு வீரத்துகிட்ட போய் கை கொடுத்துச்சாம், வீரமோ “போ.. போ நான் உங்கிட்ட தோத்து போய் கோழையாக முடியாது “என்று விரட்டியது. இப்படியே ஒவ்வொரு உணர்வுகளும் அதை விரட்டியடிக்கவும் காதல்  சோகமா, சோகத்துகிட்டவாவது சேர்ந்துக்கலாம்னு விண்ணப்பிக்க சோகமோ, “சரியா போச்சு போ நானே சோகமா இருக்கேன்..  இதுல நீ வேறயா? “ ன்னு திட்டி கழுத்தை புடிச்சி தள்ளிச்சாம்.  மனுஷனை விட்டு வெளியில வந்த காதல் யாருமே என்னை ஏத்துக்க மாட்டேங்கிறாங்க எதுக்கு நான் இருக்கனும் னு புலம்ப..  ஒரு குரல் “ வருத்தப்படாதே.. நான் இருக்கேன்னு… “ஆதரவா தோள் தட்டி கை கொடுத்துச்சாம். ஆமா    நீ யாரு?ன்னு காதல் கேட்டுச்சாம். அதுக்கு அந்த குரல், நான் தான் "காலம்.." சமயம் பார்த்து உன்னை எல்லாரோடும் சேர்த்து வைக்கிறன்னு சொல்லுச்சாம்.
( காதல் வந்து சந்தோஷமா இருக்கிறதும், சோகமாவுறதும் , கோழை ஆகி தற்கொலை பண்ணிக்கிறதும்  இந்த காலம் பண்ற வேலைதானுங்களா…? எல்லாம்   நேரம்ங்க…!)
சுவர்க்கம் எங்களுக்கு ரொம்ப கிட்ட..!



ஒரு யாத்திரிகர் எல்லா நாட்டுக்கும் பயணம் கிளம்பினார். கனடாவுல ஒரு ஆலயத்துக்கு  போறார் அங்க  சொர்க்கத்துக்கு போன் போட்டு பேசுனும்னா 10000 டாலர் என்று இருந்தது , சரின்னுட்டு ஜப்பான் போறார் அங்கேயும் ஒரு ஆலயத்தில் சொர்க்கத்துக்கு பேச 20000 டாலர் என்று இருந்தது. இப்படியே ஒவ்வொரு நாடா போறார் எல்லா நாட்டு ஆலயத்திலும் 30000 , 40000  என்று இருந்தது. கடைசியா இந்தியா வர்றார் . இந்தியாவில் இருக்கிற ஒரு ஆலயத்திற்கு   போறார். அங்க சொர்கத்துக்கு பேச ஒரு ரூபாய் என்று இருந்தது. ரொம்ப ஆச்சரியமான யாத்திரிகர்  ஆலயத்தில் இருந்த சாமியாரை கேட்கிறார். எல்லா நாட்டிலயும் சொர்கத்துக்கு பேச ரொம்ப காஸ்ட்லியா இருக்கு உங்க நாட்டில மட்டும் எப்படி ஒரே ஒரு ரூபா என்று கேட்டார். அதற்கு சாமியார்  சொன்னார் சொர்க்கம் எங்களுக்கு லோக்கல் கால் என்று.
(சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரை போல வருமா..ன்னு ராமராஜன் மாதிரி பெருமையா பாட ஆரம்பிச்சிட்டிங்க போலிருக்கு..  யப்பா ... எப்படியோ தாய் நாட்டுக்கு பெருமை சேர்த்தவங்க வரலாற்றுல என் பேரும் வந்துடுச்சி.. ! )