Saturday 18 August 2012

காதல் தத்துவமுங்கோ

ஒரு மனிதனுக்குள் புது உணர்வா காதல் நுழைஞ்சதாம். மனுஷனுக்குள்ள இருக்கிற உணர்வுகளோட ஒன்றிப்போகலாம்னு சந்தோஷத்துகிட்ட போய் கை கொடுத்துச்சாம், ஆனா சந்தோஷமோ “வேண்டாம் உன் உறவு நான் மகிழ்ச்சியா இருக்கிறது உனக்கு பிடிக்கலையா.. உன்னை ஏத்துகிட்டா என் சந்தோஷமே போயிடும் ஆளைவிடு” ன்னு வேகமா நழுவிக்குச்சாம். சரின்னுட்டு வீரத்துகிட்ட போய் கை கொடுத்துச்சாம், வீரமோ “போ.. போ நான் உங்கிட்ட தோத்து போய் கோழையாக முடியாது “என்று விரட்டியது. இப்படியே ஒவ்வொரு உணர்வுகளும் அதை விரட்டியடிக்கவும் காதல்  சோகமா, சோகத்துகிட்டவாவது சேர்ந்துக்கலாம்னு விண்ணப்பிக்க சோகமோ, “சரியா போச்சு போ நானே சோகமா இருக்கேன்..  இதுல நீ வேறயா? “ ன்னு திட்டி கழுத்தை புடிச்சி தள்ளிச்சாம்.  மனுஷனை விட்டு வெளியில வந்த காதல் யாருமே என்னை ஏத்துக்க மாட்டேங்கிறாங்க எதுக்கு நான் இருக்கனும் னு புலம்ப..  ஒரு குரல் “ வருத்தப்படாதே.. நான் இருக்கேன்னு… “ஆதரவா தோள் தட்டி கை கொடுத்துச்சாம். ஆமா    நீ யாரு?ன்னு காதல் கேட்டுச்சாம். அதுக்கு அந்த குரல், நான் தான் "காலம்.." சமயம் பார்த்து உன்னை எல்லாரோடும் சேர்த்து வைக்கிறன்னு சொல்லுச்சாம்.
( காதல் வந்து சந்தோஷமா இருக்கிறதும், சோகமாவுறதும் , கோழை ஆகி தற்கொலை பண்ணிக்கிறதும்  இந்த காலம் பண்ற வேலைதானுங்களா…? எல்லாம்   நேரம்ங்க…!)