Saturday 18 August 2012

கவிதை ( அனாதையான முதியவர்கள் )



"  அனுபவ பொக்கிஷம் "

கடந்து வந்த
பாதைகளின்
' முக'வரிகள்...
பிரயாணித்த
தடங்களின்
அனுபவங்கள்..
ஓடியாடி உழைத்த
நாட்களை
தளர்ந்த நடையிலும்
தளராமல் அசை போடும்
முதுமை..!
பழையன கழிதலும்
புதியன புகுதலும்
ஜட பொருள்களுக்குதானே...?
அனுபவ பெட்டகமான
முதியோர்களை
போற்றி பாதுகாப்பது விட்டு
வீதியில் ஏன் தொலைத்துவிடுகிறீர்..?