Friday 31 August 2012

“  நாட்டு நடப்போய்….”


“ நம்ம ராமசாமி பெரிய இடத்திலதான்பா பெண் எடுத்திருக்கான்… கல்யாண பந்தியில இலையில் எல்லாருக்கும் ஒரு வாழைப் பழம் வச்சிருந்தாங்கப்பா..”
“மாமி கிராண்டா இல்ல கொலு வச்சிருக்கா.. வர்றவாளுக்கு  வெத்தலை பாக்கு தாம்பூலத்துல ஜதை வாழைப்பழமில்ல சேர்த்து தர்றா…”
“சீனு அம்மாம் பணத்தை வச்சிட்டு ரொம்ப கஞ்ச பிசினாறிப்பா… பத்திரிக்கை வைக்கிறப்ப வெத்திலைப் பாக்கோட  ரெண்டு சாத்துக்கொடில்ல எடுத்துட்டு வந்தான்..?”
வாழைப்பழத்துக்கு வந்த வாழ்வு பாருங்கள். பங்க் கடை , பிளாட்பாரம்.. பெரிய கடைகள்னு சீப்பு சீப்பா கடை பரப்பிகிட்ட இருந்த வாழைப்பழம் இப்ப சீப் இல்ல…’ chief ‘ ஆ  இல்ல ஆயிடுச்சு.  வேலையில்லாம உட்கார்ந்திருக்கவனிலிருந்து  சாப்பிட நேரமில்லாம சுத்திக்கிட்டிருக்கவன் வரை பசிக்கிற வயத்துக்கு சமாதானம் சொல்லிகிட்டிருந்தது ரெண்டோ  நாலோ வாழைப்பழத்தை புட்டு போட்டு சிங்கிள் டீயை ஊத்திகிட்டுதான்.!   இப்ப   அதவிட ‘சரவண பவன்’ ல ரெண்டு இட்லி சாப்பிடலாம்னு புறப்பட்டுட்டாங்க. பின்ன.. ஒரு பழமே அஞ்சு ரூபா இல்ல ஆயிடுச்சி? 

அது சரி உற்பத்தி குறைஞ்சதால இந்த கிடு கிடு விலைங்கிறாங்க.  

மஞ்ச பையோடு வாழப்பழ தார் எடுத்துகிட்டு கிராமத்திலருந்து   நம்ம பார்க்க வர்ற பட்டிக்காட்டு  சித்தப்பு, பெரியப்பு எல்லாம் இப்ப ஹீரோ கணக்கா ஆயிட்டாங்க. ஒஸ்தின்னு வாலாட்டிகிட்டிருந்த ஆப்பிள் பக்கத்தில இப்ப‘நாங்களூந்தேன்’ னு வாழை பழமும் உட்கார்ந்துக்கிட்டதால   அவுகளுக்கு  இந்த பில்- டப்பு..!
 
தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டா காலையில சிக்கல் இல்லன்னு மருத்துவம் சொல்லுது. அதெல்லாம் வாணாம் தினம் ஒரு வாழை பழ விலையை கேட்டாவே போதும்..  சிக்கல் இல்லாம கலக்கிடும்னு பொருளாதாரம் சொல்லுதுங்க.