Thursday 17 May 2012

கவிதை

தீயாய் எழுந்த கேள்விகள்



 
பஞ்ச பூதங்களில்
ஒன்றாய் வைத்து
போற்றினோமே...
போற்றிய நெஞ்சை
பதைபதைக்க வைத்தது
நியாயம்தானா..?
இரைக்கு உன்னை
பயன்படுத்தினால்..
பதிலுக்கு உன் இரைக்கு
விழுங்க கிடைத்தது-
பச்சிளம் குழந்தைகள்தானா..??
உன் தீ நாக்கு சுவைக்க
அப்பாவி குழந்தைகளா கிடைத்தனர்..?
ஆக்கவும், அழிக்கவும்
பயன் படுகிறாய் என்றால்..
அழித்துக்கொள்-
இப்படி செய்யும் உன் பாதக செயலை..
அழித்துக்கொள்.
நீ பலி கொண்டாயோ
மெத்தன செயலால்
பழி கொண்டாயோ
தெரியவில்லை.

இப்படி ஒரு
கொடூரம் உண்டோ
கண்ணீரே சுடுகிறது.
நீ கும்பகோணத்தில் பற்றினாலும்..
இமயம் வரை மக்கள்
இதயங்களை உலுக்கிவிட்டாய்.
தீ நாக்கே
இனியாவது
‘நா காக்க’
என்ற அறத்தை போற்று..!

( கும்பகோணம் பள்ளி தீ விபத்தின் கண்ணீர் வார்த்தைகள்)