Monday 14 May 2012

தவறு யாருடையது..?






நானும் என் தோழியும் ஒரு விசேஷத்திற்கு சென்றிருந்தோம். எங்கள் முன் வரிசையில் ஒரு கணவன்,
மனைவி இரண்டு குழந்தைகளோடு உட்கார்ந்திருந்தனர். குழந்தைகள் இருவரும் செல்போனில்
எதையோ பார்த்துக்கொண்டிருந்தனர். ஏதேச்சையாக அவர்கள் வைத்திருந்த செல்போனை பார்த்து
அதிர்ந்தோம்.காரணம், செல்போனில் ப்ளூபிலிம் ஓடிக்கொண்டிருந்தது. அந்த குழந்தையின் தாயை
கூப்பிட்டு பார்க்க சொன்னோம். அவர் உடனே குழந்தைகளின் கையில் இருந்த செல்போனை
பிடுங்கி ஆப் செய்தார். குழந்தைகளையும் அடித்தார். செல்போனில் ப்ளூபிலிமை வைத்தது இவர்கள்
தவறு. தெரிந்தும் அந்த செல்லை குழந்தைகளிடம் கொடுத்தது அதைவிட தவறு. தவறுகள் எல்லாம்
இவர்களிடம் இருக்க குழந்தைகளை அடித்து என்ன பயன்..?

( 13-08-2011 தினமலர்- பெண்கள் மலரில் எங்கள் பக்கத்தில்)