Saturday 18 August 2012

புரியாத புதிர்…!

உன்னிடம் பேசும் முன்
காதல் இத்தனை
அழகாய் தெரிந்ததில்லை ..!
உன் நினைவுகள் ஆக்கிரமிக்கு முன்
மனம் இத்தனை
ஒப்பனை கொண்டதுமில்லை..!
*****************************
இதெல்லாம் நடந்தது…!
  நிலவை பார்க்க கூட
வானம் பார்த்ததில்லை
அண்ணாந்து பார்க்கிறேன்
வெயில் என்றும் பாராமல்…

ஓயாமல் அங்குமிங்கும்
பயணிக்கும் என் கண்கள்
விட்டத்தில்
இறங்கி  அசையாமல் நிற்கிறது…

தேடி வந்த நண்பர்களை
விட்டு
ஓடிப் போகிறேன்
தனிமை தேவை என்று..
மணிக்கொரு முறை
தேநீர் கேட்கும்
தொண்டை கூட
தேவை மறந்தது..

என்ன நடந்தது கேட்பவர்களிடம்
எப்படி சொல்வேன்..
உன்னை முதன் முதலாய்
பார்த்ததிலிருந்து
இப்படித்தான் நடக்கிறது என்று…!

 *****************************
*********
“ மறக்காமல் நினைத்து…! “
 நம் கடைசி சந்திப்பு
இன்னும் காட்சியாய்..
மௌனத்தை கிழித்தெரிந்த
உன் வார்த்தைகள்
வரி வரியாய் மனதில்..
நேசிப்பை சொல்ல
ஒரு வார்த்தை போதுமானதாயிருந்தது..
பிரிவுக்கு மட்டும்
பல வார்த்தைகள் தேடி கொண்டிருந்தாய்..
எல்லாம் சொல்லி விட்டு
கடைசியாய் சொன்னாய்-
மறந்து விடு..
அதைத்தான் நினைத்து
கொண்டிருக்கிறேன்  இன்னமும்…!
******************************
*********
காதலே.. போ…!
கை கோர்த்து நடந்தோம்
கால்கள்  கெஞ்சும் வரை…!
சாலையோர இளைப்பாறலில்.. 
  நீ குடித்து மிச்சம் தந்ததால்
இள நீர் இன்னும் சுவைத்தது..!
ஆளில்லா அரங்கில்
என் காதல் பார்வைக்கு
சிணுங்கி சிரித்தாய்..!
இரவுகள் உறங்காமல் போனது..
முகத்தில் உன் உதடுகள்
பதித்த ஈரம் காயாமல்..
இப்படித்தான் இன்புற்றிருந்தேன்..
உன் மறுப்பை சொல்லும் வரை…!