Thursday 16 August 2012

கவிதை :

சொன்னது என்னாச்சு..?


மாற்றல் வந்தது
மாறாத அவள் நினைவுகளோடு
இடம் பெயர்ந்தேன்
தொலைவில் இருந்தாலும்
தொலைபேசி சேர்த்தது.
காலம் வரும் வரை
காத்திருக்க கேட்டேன்..
காலம் கனிந்தது
இனிப்பான  செய்தி
சொல்ல
சொல்லாமல்  தேடிப்போனேன்..
மன்னித்து விடு
காலம் தாழ்த்தியதுன் தவறென்றாள்..
ஒரு  நாள் வாழ்ந்தாலும் உன்னோடுதான்
வாழ்வேன் என்றுரைத்த அவள் -
 இன்னொருவன் மனைவியாய்..!