Thursday 16 August 2012

“ அப்ப… அப்புறம்…!”



 அடிச்சி பிடிச்சி  பஸ்ல ஏறி மேல கம்பியை புடிச்சிகிட்டதும்  அப்பதான்   ஞாபகம் வரும் நம்ம கையில் இருக்கிற வாட்ச்  மூணு நாளா ஓடாம நின்னுட்டிருக்கிறது… ‘ அடடா வாட்ச்சுக்கு செல் தீர்ந்து போயிருச்சு   நேத்தே போட்டுடனும்னு நினைச்சோமே மறந்துட்டோம் போல …  யாரும் பார்க்கிறதுக்கு முன்னாடி நாம குத்து மதிப்பா ஒரு டைமை திருப்பி வச்சிகிட்டு அப்படியே ஜன்னல் வழியே ஒரு லுக்கு விடும் போது பஸ்ல ஏறின ஒரு காய்காரம்மா கூடைய பக்கத்துல மூச்சு வாங்க வச்சிட்டு இருக்கிறவங்களை எல்லாம் விட்டுட்டு  நம்மை பார்த்து கேட்கும்.. டைம் என்னங்க? நாம ஒரு அஞ்சு நிமிஷம் கூட்டி சொல்லிட்டு திரும்பிகிட்டதோடு பிரச்சினை விடலை. ரெண்டு ஸ்டாப் முடிஞ்சதும் மறுபடியும் நம்மகிட்டயே கேட்கும் மணி என்னங்க…? ( ஏம்மா பஸ்ல எத்தன பேரு வாட்ச் கட்டியிருக்கான்… என்னையே துரத்தி துரத்தி கேட்கிற…)  வாட்ச்சை பார்த்துட்டு புருவத்தை சுருக்கி ரியாக் ஷன் தந்து ‘வாட்ச் நின்னுட்டு இருக்குங்க ..’ என்னமோ அப்பதான்   நின்ன மாதிரி பில்- டப் கொடுத்து சொல்லும்போது  அப்ப   நமக்கு வெறுப்பா இருக்கும் அப்புறம் நினைச்சி பார்த்தா காமெடியா இருக்கும்.
அப்பதான்  200 ரூபாய்க்கு ரீசார்ஜ் பண்ணிட்டு  வந்தா, நண்பன் வந்து கேட்பான் மச்சான் செல்லை வீட்டில வச்சிட்டேன் அவசரமா தங்கச்சிக்கு போன் பண்ணனும் உன் செல்லை கொடேன்னு வாங்கி, காலையில பல்ல  விளக்கினதிலர்ந்து  பாட்டியோட பாட்டி பாத்ரூம்ல வழுக்கி விழுந்தது வரை பேசிட்டே இருக்கான்.    நாம மனசுக்குள்ள அடேய்.. பர்சில் இருக்கிறதை பிளேடு போட்டாக்கூட போயிட்டு போவுதுன்னு விட்டுடலாம் (அதுலதான் ஒண்ணுமில்லையேன்னு) ஏண்டா என் செல்லை வச்சிகிட்டு ராவிகிட்டிருக்கன்னு திட்டிகிட்டிருப்போம். ஒருவழியா  தேங்க்ஸ் டா மச்சான்னு போனை தரும்போது பரவாயில்லைப்பா என்று சொல்லிவிட்டு ஆமா வீட்டிலர்ந்துதான புறப்பட்ட எதுக்கு தங்கச்சிகிட்டே இவ்வளவு நேரம் பேசின? என்று கேட்டதும், மச்சான் எனக்கு காதலின்னா உனக்கு தங்கச்சிதானேன்னு கேட்டுட்டு போயிடுவான். அப்ப   நமக்கு காமெடியா  இருக்கும். அப்புறம் நினைச்சி பார்த்தா வெறுப்பா இருக்கும்.(ஏன்னா நமக்குதான் மிஸ்டு மெசேஜ் க்கு கூட  ஆளில்லையே …! )
( இந்த மாதிரி தினசரி   நம்ம லைப்ல நடக்கிறதெல்லாம் அப்ப ஒரு மாதிரி இருக்கும்.. அப்புறம் வேற மாதிரி இருக்கும். இத படிச்சிட்டு முதல்ல சிரிச்சிட்டு அப்புறம் இதெல்லாம் படிச்சி தொலைக்க வேண்டியதாயிருக்குன்னு நீங்க அழுதீங்கன்னா அதுக்கு நான் பொறுப்பில்லைங்க…!)