Thursday 16 August 2012

' சொல்வதெல்லாம் உண்மை..! '

கவிதை:


' சொல்வதெல்லாம் உண்மை..!  '
 எனக்கு பிடித்ததை
கேட்டாள்….
ஒன்று மட்டும்தான் உலகில்-
உயிராய் கலந்த நீ
சொல்ல வந்ததை
மெல்ல முழுங்கி..
முதலில் நீ சொல் என்றேன்
வரிசையாக சொன்னாள்..
சல சலக்கும் நீரோடை ..
பச்சை பசேல் வயல்…
மெல்ல தீண்டும் தென்றல்…
கண்ணுக்கு விருந்தாய்
காட்சிகளை சொல்லிக் கொண்டே
போனவள்-
கடைசி வரை
செவிக்கு மட்டும் படைக்கவில்லை…
‘ என்னை பிடிக்கும் ‘ என்று சொல்லி…!