Thursday 16 August 2012

கவிதை: ( குளக்கரையில் அம்மானை ஆடும் குழந்தைகள்)




குளத்து நீரின் மேற்புறம்
சற்றே சலனப் பட்டதும்-
‘சரக் ‘ கென ஆழம்
செல்லும் மீன் குஞ்சுகளாய்..

குழுமி கிடக்கும்
குட்டிக் கைகளில்
பிடி பட்டும்..
விடு பட்டும்
தாளம் போடும்
கூழாங்கற்கள்….

அரும்பு கரங்களில்
அகப்படும் போது..
அங்கே-
மலராய் மலர்ந்தன
தாமரை சிரிப்பூ!